காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் “காத்துவாக்குல ரெண்டு காதல்“. படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. அதன்பின் இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா கொரோனா இரண்டாவது அலை காரணமாக படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டது.
அதன்பிறகு கடந்த சில நாட்களுக்கு முன்பு “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் தொடங்கியது. இதுவரை 80% படப்பிடிப்பு முடிந்த நிலையில், இந்த வார இறுதிக்குள் முழு படப்பிடிப்பை முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளனர்.
இந்த நிலையில், படத்தில் தனக்கான படப்பிடிப்பை நடிகை சமந்தா முடித்துள்ளார். தனது காட்சிகளை முடித்த கொண்டாட்டதில் நடிகை சமந்தா நயன்தாரா, விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி ஆகியோருடன் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அதற்கான புகைப்படங்களும் படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அதைபோல் படத்தின் படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றும் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில், நயன்தாரா – சமந்தா வுடன் பஸ்சில் விஜய் சேதுபதி பயணம் செய்வது போல் காட்சி இடம்பெற்றுள்ளது. கமல் ஹாசன் நடித்த சத்யா படத்தில் இடம் பெற்ற வலையோசை பாட்டில் இதைபோல் காட்சி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…