விஜய் சேதுபதி அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் சூரிக்கு தந்தையாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . தற்போது பல படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் ஹீரோ வேடங்களில் மட்டுமின்றி வில்லன் வேடத்திலும் தனது அசத்தலான நடிப்பில் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் .அந்த வகையில் விஜய்க்கு வில்லனாக சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார்.
இந்த நிலையில் இவர் தற்போது வெற்றிமாறன்-சூரி கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.ஜெயமோகனின் “துணைவன்” எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படவுள்ள இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக பவானி ஸ்ரீ நடிக்கவுள்ளார் . இந்த படத்தில் விஜய் சேதுபதி அப்பா கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுவும் சூரிக்கு தந்தையாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.ஏற்கனவே இந்த கதாப்பாத்திரத்தில் பாரதிராஜா நடிக்க ஒப்பந்தமானதும் ,அதன் பின் சில காரணங்களால் படத்திலிருந்து விலகிய பின்னர் அதற்கு விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டதும் குறிப்பிடத்தக்கது . எந்த கதாபாத்திரம் ஆனாலும் தனது கச்சிதமான நடிப்பால் விஜய் சேதுபதி ரசிகர்களின் மனதை கொள்ளை கொள்வார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…