விஜய் சேதுபதி விவகாரம் தொடர்பாக ஆதரவளித்த பிரபல இயக்குநர்.!

Published by
Ragi

சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று, அப்படி ஒரு குழந்தை கேட்டதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள்,இது புரியாமல் மிகவும் மோசமான வசைகளை வீசியோர் தெய்வத்தின் சாட்சியாக திரும்பப் பெற்றுக்கொள்ளுங்கள். என்று ட்வீட் செய்துள்ளார். 

விஜய் மற்றும் அஜித் இவர்களுக்கு அடுத்த இடத்தில் உயர்ந்து இருப்பவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.தற்போதுவிஜய்யின் மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து முடித்துள்ளார். மேலும் இவர்  தெலுங்கில்  ‘Uppena’ படத்தில் வில்லனாகவும்  நடிக்கவுள்ளார் . சமீபத்தில் அதன் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் இவர் காத்து வாக்குல ரண்டு காதல், யாதும் ஊரே யாவரும் கேளிர், துக்ளக் தர்பார், மாமனிதன், லாபம் ஆகிய படங்களில் ஹீரோவாகவும், கடைசி விவசாயி, கா பே ராணாசிங்கம் உள்ளிட்ட படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடிக்கவுள்ளார். அதனையடுத்து இந்தியில் லால் சிங் சத்தா என்ற படத்திலும், மலையாளத்தில் நடிகை மஞ்சு வாரியருடன் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். தற்போது இவர் அடிக்கடி பல சர்ச்சைகளில் சிக்கி தவித்து வருகிறார்.

 அந்த வகையில் இவர் கடந்தாண்டு தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் கடவுளை குளிப்பதை காட்டுகிறார்கள், ஆனால் டிரஸ் அணிவதை திரை போட்டு மூடுகிறார்கள் என்று நகைச்சுவையாக பேசியுள்ளார். இந்த பேச்சால் இந்துக்களை தவறாக சித்ததரித்ததாக   கூறி சில மதவாதிகள் விஜய் சேதுபதி மற்றும் அவரது குடும்பத்தினரை அவதூறாக பேசி வருகின்றனர். அந்த வீடியோவால் தற்போது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

மேலும் விஜய் சேதுபதியின் மீது இதற்காக அகில இந்திய இந்துமகா அமைப்பு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இந்த நிலையில் விஜய் சேதுபதியை வைத்து தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை, மாமனிதன் ஆகிய படங்களை இயக்கிய சீனு ராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை  வெளியிட்டு விஜய் சேதுபதிக்கு ஆதரவாக பேசியுள்ளார். அதில், குழந்தையும் தெய்வமும் ஒன்று, அப்படி ஒரு குழந்தை கேட்டதாக இருவரும் சொல்லியிருக்கிறார்கள், இது புரியாமல் மிகவும் மோசமான வகைகளை வீசியோர் தெய்வத்தின் சாட்சியாக திரும்ப பெற்றுக் கொள்ளுங்கள். விரைவில் மாமனிதன் திரைப்படம் வெளியாகும் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Ragi

Recent Posts

இஸ்லாமிய வாசகத்தை ஓதச் சொன்னாங்க..அப்பா செய்யல சுட்டுட்டாங்க..மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

இஸ்லாமிய வாசகத்தை ஓதச் சொன்னாங்க..அப்பா செய்யல சுட்டுட்டாங்க..மகள் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் ஏப்ரல் 22 மாலை நடந்த பயங்கரவாத தாக்குதலில்…

12 minutes ago

”பஹல்காம் தாக்குதலுக்கு தங்களுக்கும் தொடர்பில்லை” – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர்.!

நாட்டையே உலுக்கிய ஜம்மு-காஷ்மீர் பாஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கர பயங்கரவாதத் தாக்குதலுக்கு ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான்…

26 minutes ago

பாஹல்காம் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 26 பேரின் விவரங்கள்.!

ஸ்ரீநகர் : இந்தியர்களுக்கு மற்றுமொரு கருப்பு நாளாக காஷ்மீரின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் அமைந்திருக்கிறது. ஆம், நேற்றைய தினம் ஜம்மு…

1 hour ago

பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள்? விமானம் மூலம் தேடுதல் வேட்டையில் இந்திய ரானுவம்!

ஸ்ரீநகர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

2 hours ago

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

2 hours ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

3 hours ago