மாஸ்டர், பேட்ட உள்ளிட்ட படங்களில் வில்லனாக நடித்துள்ள நிலையில் தற்போது விஜய்சேதுபதி மற்றொரு கன்னட படத்தில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பொங்கலை முன்னிட்டு விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்திருந்த மாஸ்டர் திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய்சேதுபதி நடித்து இருந்தார். விஜய்யின் கதாபாத்திரம் எவ்வாறு புகழப்பட்டதோ அதேபோல ரசிக்கக்கூடிய வில்லனாக விஜய் சேதுபதி இருப்பதாகவும் ரசிகர்களால் புகழப்பட்டு வந்த நிலையில், ஏற்கனவே விஜய் சேதுபதி ரஜினியின் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து கலக்கியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது மாஸ்டர் படத்தில் வில்லனாக நடித்து நல்ல விமர்சனங்களை பெற்றுள்ள நிலையில் கன்னடத்தில் யாஷ் நடித்த கே ஜி எஃப் படத்தின் இயக்குனர் பிரசாந்த் நிகில் அவர்கள் அடுத்ததாக பிரபாஸை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தொடர்ச்சியாக விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பது அவரது ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…