விஜய் மக்கள் இயக்கத்தின் 50 மாவட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜய் “அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம்” என்ற பெயரில் பல சமூக பணிகளை செய்து வருகிறார் . இதனால் அவரது ரசிகர்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து வருகின்றனர் . இதனையடுத்து சமீபத்தில் விஜய் அவர்களின் தந்தையும் , இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாகவும் , அதனை கேள்விப்பட்ட விஜய் அந்த கட்சிக்கும் , தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியதுடன் , தனது பெயரோ அல்லது புகைப்படமோ அந்த கட்சிக்காக பயன்படுத்தினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியிருந்தார் . இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதுடன் , தந்தை மற்றும் மகன் இடையே உள்ள மோதலும் பெரிதாக பேசப்பட்டது.
இந்த நிலையில் விஜய் இன்று தனது சென்னையில் உள்ள பனையூர் இல்லத்தில் வைத்து தனது மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து பேசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தில் மொத்தமாக 200 மாவட்ட நிர்வாகிகள் உள்ள நிலையில் திருச்சி ,கரூர் , பெரும்பலூர் உள்ளிட்ட 30 மாவட்டங்களில் உள்ள 50 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சென்னை : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…