தமிழ் சினிமாவில் தனக்கனே தனிப்பாணி வைத்து பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை என தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணியில் வெளியாகி பெரிய வெற்றி படங்களில் அசுரன் படமும் இணைந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பிரகாஷ் ராஜ், பசுபதி, கென் கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘அசுரன்’. பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் 100 நாட்களைக் கடந்துள்ளது. இதனால், 100 நாட்கள் கடந்த அசுரன் படத்துக்கு வெற்றி விழா நேற்று சென்னையில் ரஷ்ய கலாச்சார மையத்தில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் விநியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர். பின்பு 100-வது நாள் நினைவுப் பரிசு அனைவருக்கும் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேசிய அனைவரும் இயக்குநர் வெற்றிமாறனுக்கும், தனுஷுக்கும் நன்றி தெரிவித்தார்கள். பின்னர் இந்த விழாவில் நடிகர் பவன் பேசும்போது, ஒரு படத்துக்கு 100-வது நாள் விழா என்பது ரொம்பவே அரிதாக நடக்கிறது. இதற்கு முன்பு குருவி’ படத்தின் 150-வது நாள் விழாவில்தான் கலந்து கொண்டேன். அது எந்த அளவுக்கு உண்மையென்று தெரியவில்லை. எனக்கு இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி என்று பேசினார். அவரது பேச்சைக் கேட்டு அரங்கமே சிரிப்பொலியில் அதிர, இதனை சற்றும் எதிர்பார்க்காத தனுஷ் தன் சிரிப்பை அடக்கிக் கொள்ள எவ்வளவோ முயன்றும் மேடையிலேயே சிரித்து விட்டார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் அஜித் ரசிகர்களால் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்களிடையே பெரும் சர்ச்சையை கிளப்பிய இவரது பேச்சி சமூகவலைத்தளத்தில் அவர்களது கோவத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மேலும், இறுதியாக தனுஷ் பேசும்போது, தன் பேச்சில் தொடக்கத்திலேயே, அசுரன் படத்தின் 100-வது நாள் விழா நடைபெறுவதில் மகிழ்ச்சி. இந்த மாதிரியான விழாவில் நாம் பேசுவது மட்டும்தான் நம்முடைய கையில் இருக்கும். எது சரியோ அதை எடுத்துக் கொள்ளுங்கள். எது சரியில்லையோ அதை விட்டுவிடுங்கள் என்று தெரிவித்து முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் நடிகர் பவன் விஜய்யுடன் குருவி, அஜித்துடன் ஏகன், தனுஷ் உடன் வடசென்னை, அசுரன் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பொல்லாதவன் படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…