தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு எதிராக கொதித்தெழுந்த விஜய் தேவரகொண்டா.!

Published by
Ragi

தவறான செய்திகளை பரப்பும் ஊடகங்களுக்கு எதிராகவிஜய் தேவரகொண்டா  கொதித்தெழுந்துள்ளார். 

கொரோனா நெருக்கடியின் காரணமாக பல ஏழை எளிய மக்களின் வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகியுள்ளது மட்டுமில்லாமல் திரைப்படத் துறை ஊழியர்களின் வாழ்வும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது. இதனால் பல பிரபலங்கள் தங்களால் இயன்ற தொகையையும், அத்தியாவசிய பொருட்களையும் வழங்கி உதவி வருகின்றனர். அதிலும் தெலுங்கு திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வருகின்றனர். அதில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தேவரகொண்டா தனது அறக்கட்டளை மூலம் உதவி செய்தது மட்டுமில்லாமல் பலரிடம் உதவியையும் கேட்டுள்ளார். மேலும் உதவி தேவைப்படுபவர்கள் தன்னுடைய இணையதளத்தில் பதிவு செய்யவும் அறிவித்திருந்தார். அவர் தன்னுடைய பணமான ரூ. 25 லட்சத்துடன், அறக்கட்டளை சார்பில் நிதி திரட்டி கிடைத்த ரூ. 75 லட்சத்தையும் கொண்டு 7500 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். 

இந்த நிலையில் இவருக்கு படங்கள் தோல்வியை தழுவிய பணம் இல்லாத காரணத்தினால் இவ்வாறு செய்கிறார் என்று ஆந்திர இணையதளம் ஒன்று தவறான செய்திகளை பரப்பியுள்ளது. இதனால் கோவமடைந்த விஜய் தேவரகொண்டா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆந்திரா நாளிதழ் இரு நாட்களுக்கு முன்பு பேட்டி கேட்டதாகவும், மறுத்ததால் இவ்வாறான புரளியை பரப்புவதாகவும் கூறியுள்ளார். இதுபோன்ற தவறான ஊடகங்களால் இயக்குநர்கள், நடிகர்கள் பலர் பாதிப்படைவதாகவும், நம்மை போன்றவர்களை குறித்து தவறான செய்தியை பதிவிட்டு பணம் வாங்குகிறார்கள் என்றும், நான் உழைத்து சம்பாதித்த பணத்தை யாருக்கு வேண்டுமானாலும் வழங்குவேன், நீங்கள் கேட்க யார் என்றும், இது போன்ற போலியான ஊடகங்களை நம்பாதீர்கள் என்று ஆவேசமாக பேசியுள்ளார்.

இதற்கு தெலுங்கு திரையுலகினர் பலர் தங்களது ஆதரவுகளை தெரிவித்துள்ளனர். நடிகர் சிரஞ்சீவி, இதுபோன்ற அவதூறுகளால் நானும் எனது குடும்பமும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நாங்கள் உங்களுக்கு உறுதுணையாக நிற்குறோம் என்று கூறி ஆதரவளி த்துள்ளார்.  அதனை தொடர்ந்து நடிகர் மகேஷ் பாபு, நான் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறேன் என்று கூறியுள்ளார். இதுபோன்று பல பிரபலங்கள் ராஷி கன்னா, ராதிகா சரத்குமார், ராணா டக்குபதி, கொரட்டால சிவா, நாகார்ஜுனா, ரவி தேஜா என பலர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

Published by
Ragi

Recent Posts

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

CSKvsPBKS : மீண்டும் சொதப்பிய சென்னை…பஞ்சாப் அணி அசத்தல் வெற்றி!

பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

2 hours ago

சென்னை தூணை சரித்துவிட்ட சின்னப் பையன்! யார் இந்த பிரியான்ஷ் ஆர்யா?

பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…

3 hours ago

சென்னையை சுழற்றி அடித்த பிரியான்ஷ்! பஞ்சாப் வைத்த பிரமாண்ட இலக்கு!

பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…

4 hours ago

உடல் நலக்குறைவால் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்! உடல் நிலை எப்படி இருக்கு?

சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…

5 hours ago

அதிரடிக்கு பதிலடி கொடுத்த கொல்கத்தா…இருந்தாலும் கடைசி நேரத்தில் த்ரில் வெற்றிபெற்ற லக்னோ!

கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…

6 hours ago

“பாஜகவுடன் உடனடியாக கூட்டணி அமைக்க வேண்டும்!” மீண்டும் வலியுறுத்தும் சைதை துரைசாமி!

சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …

7 hours ago