விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளரை கடந்து கதாசிரியராகவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய் ஆண்டனி, இவர் இசையமைப்பாளராக சினிமாயுலகில் அறிமுகமானார். அதனையடுத்து பல படங்களில் நடித்து பிரபல முன்னணி நடிகர்களில் ஒருவராக உயர்ந்து கொண்டிருப்பவர். இவர் ஒரு பின்னணி பாடகரும் கூட. அண்மையில் இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் சாதனையும் படைத்து, இவரின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் தமிழரசன், அக்னி சிறகுகள், காக்கி ஆகிய மூன்று படங்களில்
கமிட்டாகியுள்ளார்.
தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2016ம் ஆண்டு சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்து, தயாரித்து, இசையமைத்த திரைப்படம் பிச்சைக்காரன்.
இதில் விஜய் ஆண்டனியுடன் சாட்னா டைட்டஸ், பகவதி பெருமாள், முத்துராமன், தீபா ராமானுஜம் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். இந்த படம் தமிழில் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் தெலுங்கு மொழியிலும் வெளியிடப்பட்டு வரவேற்பைப் பெற்றது. தற்போது ஊரடங்கில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எழுதி முடித்துள்ளதாகவும், முதல் பாகத்தை இயக்கிய சசி வேறு படங்களில் பிஸியாக இருப்பதால், இரண்டாம் பாகத்தை அவர் இயக்குவதில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தை பிரமாண்டமாக எடுக்க விஜய் ஆண்டனி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இயக்குநர் இவரா அல்லது வேறு யாராவதா என்ற தகவல் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது விஜய் ஆண்டனி இசையமைப்பாளர், பாடகர், நடிகர், தயாரிப்பாளரை கடந்து கதாசிரியராகவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…