மக்களை அடக்கக்கூடாது..சட்டத்தை உருவாக்கி…மக்களுக்காக தான் சட்டமே!வெடித்து விளாசியவிஜய்..

Default Image

சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது. மக்களுக்கு எது தேவையோ? அதையே சட்டம் ஆக்க வேண்டும் என்று சிஏஏ குறித்து  மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் மறைமுகமாக விளாசியுள்ளார்.

சென்னையில் தனியார் ஹோட்டலில் நடந்த  ‘மாஸ்டர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில், நடிகர் விஜய் பேசினார்:அப்போது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சிஏஏ குறித்து நடிகர் விஜய் மறைமுகமாக தாக்கி பேசினார்.அவர் பேசியது: மக்களுக்கு எது தேவையோ அதையே சட்டம் ஆக்க வேண்டும். சட்டத்தை உருவாக்கி விட்டு அதில் மக்களை அடைக்கக் கூடாது.என்று குடியுரிமை சட்ட திருத்தம்(சிஏஏ) குறித்து நடிகர் விஜய் மறைமுகமாக பேசியது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.சமீப காலமாகவே தனது படங்களின் இசை வெளீயிட்டு விழாவில் அரசியல் பேசும் விஜய் இவ்விழாவிலும் என்ன பேசுவார் என்று எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தான் சொல்ல வந்த செய்தியை மற்றவர் செவிகளில் நன்கு விழுவாறு சொல்லிவிட்டு சென்றுள்ளார் என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்