வியட்நாம்: மழை வெள்ளத்தில் 18 பேர் மாயம்..!

Default Image

வியட்நாம் நாட்டில் மழை வெள்ளத்தில் சிக்கி 18 பேர் காணாமல் போய் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில நாட்களாக வியட்நாம் நாட்டில் உள்ள மத்திய பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலைகள் முழுவதும் நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

இதுவரை பெய்துள்ள மழையில் 780 ஹெக்டர் பரப்புள்ள பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளது. இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதியிலிருந்து மக்களை மீட்டு வருகின்றனர். மேலும் இந்த வெள்ளத்தில் 18 பேர் மாயமாகி உள்ளனர். இவர்களில் பலர் இறந்திருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்