சீக்கிய டிரைவர் மீது கொடூர தாக்குதல் நடத்திய வாலிபர்கள்.!

Default Image
  • சித்து என்பவர் வீட்டுக்கு வெளியே தனது காரை நிறுத்திக்கொண்டிருந்த போது  சில வாலிபர் சித்துவிடம் புகைப்பிடிப்பதற்கு “லைட்டர்” கேட்டு உள்ளனர்.
  • இதையெடுத்து அந்த வாலிபர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.பின்னர் கையில் இரும்பு கம்பியுடன் வந்து சித்துவை சரமாரியாக தாக்கி உள்ளனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள ரிச்மோண்ட் நகரை சேர்ந்தவர் பல்ஜித் சிங் சித்து .இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பிய சித்து வீட்டுக்கு வெளியே தனது காரை நிறுத்திக்கொண்டிருந்த போது அங்கு வந்த வாலிபர் சிலர் சித்துவிடம் புகைப்பிடிப்பதற்கு “லைட்டர்” கேட்டு உள்ளனர்.சித்து தன்னிடம்  லைட்டர் இல்லை என கூறிய உள்ளார்.இதையெடுத்து அந்த வாலிபர்கள் அங்கு இருந்து சென்று விட்டனர்.

பின்னர் மீண்டும் அங்கு வந்த வாலிபர்கள் தன்னிடம் 5 டாலர் இருப்பதாவும் காரில் சவாரி செல்ல வேண்டும் என சித்துவிடம்  கூறியுள்ளனர். அதற்கு சித்து தனது வேலை நேரம் முடிந்து விட்டது என கூறியுள்ளார்.மீண்டும் அங்கிருந்து சென்ற வாலிபர் திரும்பி கையில் இரும்பு கம்பியுடன் வந்து வீட்டுக்கு வெளியே இருந்த சித்துவை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.

ரத்த வெள்ளத்தில் துடித்து கொண்டு இருந்த சித்துவை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அந்த வாலிபர் தாக்கி விட்டு அங்கிருந்து ஒடி விட்டனர். இது ஒரு இனவெறி தாக்குதல் என சித்து குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்