பத்மஸ்ரீ விருதைப் பெற்றார் பழம்பெரும் நடிகை சௌகார் ஜானகி.!

Published by
பால முருகன்

கலை, கல்வி, விளையாட்டு, மருத்துவம், சமூக சேவை, உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் மிகச்சிறந்த சாதனைளின் சேவைக்காக நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் வழங்கப்படுகிறது. இந்த விருது, பத்ம விபூஷன், பத்ம பூஷன் , பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவாக வழங்கப்படுகிறது.

அதன்படி, இந்தாண்டிற்கான (2022) பத்ம விருதுகள் வழங்கும் விழா
டெல்லியில் நடைபெற்று வருகிறது. இதில் வெற்றிபெற்றவர்களுக்கு விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்கி வருகிறார். இதில், பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டுள்ளார்.

நடிகை சௌகார் ஜானகி  1950 இல் எல்வி பிரசாத் இயக்கிய தெலுங்குத் திரைப்படமான ஷாவுகாரு படத்தின் மூலம் பிரபலமானார் . இந்த படத்தின் மூலம் அவருக்கு ‘சௌகார்’ என்ற பெயர் கிடைத்தது. அதன்பிறகு 1960-களின் துவக்கத்திலேயே வரிசையாக பலத்திரைப்படங்களில் நடித்து ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானார். 70 ஆண்டுகளுக்கு மேலாக 400-க்கும் மேற்பட்ட திரைப்படத்தில் நடித்து புதிய சாதனை படைத்துள்ளார்.

புதிய பறவை திரைப்படத்தில் மிகவும் அட்டகாசமாக நடித்திருப்பார். இந்த படத்தில் மைக்கை பிடித்துக்கொண்டு “பார்த்த ஞாபகம் இல்லையோ… பருவ நாடகம் தொல்லையோ” என்ற பாடலுக்கு அவர் மேடையில் பாடுவதும் சிவாஜி அதிர்ச்சி அடைந்து பார்ப்பதும் அந்தக்காலத்தில் மிகவும் வரவேற்கப்பட்ட காட்சி. அப்போது போலவே இப்பொதும் அந்த காட்சிகளை ரசிகர்கள் ரசித்து பார்த்து உண்டு. இவர் கடைசியாக சந்தானம் நடிப்பில் வெளியான பிஸ்கோத் படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், மத்திய அரசு இவருக்கு பத்ம ஸ்ரீ விருதை வழங்கி கௌரவப்படுத்தி உள்ளது. விருதை பெற்ற இவருக்கு ரசிகர்கள் நடிகர்கள், நடிகைகள் இணையத்தின் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

14 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

14 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

14 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

14 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

15 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

15 hours ago