“வென்டாஸின் நரமாமிசம்”;தாயை கொலை செய்து சாப்பிடவருக்கு 15 ஆண்டுகள் சிறை..!

Published by
Edison

ஸ்பெயினில் வசிக்கும் இளைஞர் ஒருவர்,தனது தாயை கொலை செய்து சாப்பிட்டதனால்,அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஸ்பெயினின் வென்டாஸ் பகுதியில் வசிக்கும் ஆல்பெர்டோ சான்செஸ் கோமெஜ் என்பவர்,கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,தனது 69 வயதான தாயை கழுத்தை நெரித்து கொன்று,பின்னர் இரண்டு சமையலறை கத்திகளைப் பயன்படுத்தி தாயின் உடலை சிறிய துண்டுகளாக வெட்டி சமைத்து சாப்பிட்டுள்ளார்.

பின்னர்,ஆல்பெர்டோவின் தாயை காணவில்லை என்று அவரது தாயின் நண்பர் அளித்த புகாரை தொடர்ந்து,சந்தேகத்தின் பேரில் 2019 ஆண்டு பிப்ரவரி 23 அன்று,ஸ்பெயின் போலீசாரால் ஆல்பெர்டோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில்,இந்த வழக்கை மீண்டும் விசாரித்த நீதிபதிகள்,”குற்றம் சாட்டப்பட்ட ஆல்பெர்டோ,தனது தாயை கழுத்தை நெரித்து கொலை செய்து,பின்னர் அவரது உடலை கத்தியால் வெட்டி,குறைந்தது 15 நாட்களுக்கு மேல் வைத்து சாப்பிட்டார்.மேலும், அவரது நாய்க்கும்  உணவளித்தார்.

மீதமுள்ள சில பகுதிகளை வீட்டைச் சுற்றியுள்ள பல்வேறு பிளாஸ்டிக் கொள்கலன்களிலும்,குளிர்சாதன பெட்டியிலும் சேமித்து வைத்தார்.மேலும் எஞ்சியுள்ள சிலவற்றை பிளாஸ்டிக் பைகளில் போட்டு குப்பை தொட்டியில் வீசினார் என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.

எனவே,ஆல்பெர்டோவை 15 ஆண்டுகள் மற்றும் ஒரு சடலத்தை இழிவுபடுத்தியதற்காக ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்க வேண்டும்.மேலும்,அவர் தனது மூத்த சகோதரருக்கு 60,000 யூரோக்கள் (, 000 73,000) இழப்பீடு வழங்க வேண்டும்”,என்று கூறி தீர்ப்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து,இந்த சம்பவத்திற்கு பிறகு “வென்டாஸின் நரமாமிசம்” என்று அப்பகுதி அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published by
Edison

Recent Posts

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

அப்போ கே.எல்.ராகுல்…இப்போ ரிஷப் பண்ட்? டென்ஷனாகி திட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவுக்கு கடந்த சில ஆண்டுகளாக கேப்டன்களால் டென்ஷன் தொடர்கிறது…

23 minutes ago

இன்று கூடுகிறது சட்டப்பேரவை… கச்சத்தீவை திரும்பப் பெற வலியுறுத்தி ஒரு தனித்தீர்மானம்!

சென்னை : இன்று, ஏப்ரல் 2-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுகிறது. மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று பேரவை கூடிய…

50 minutes ago

லக்னோ படு தோல்வி..பார்முக்கு எப்போ வருவீங்க ரூ.27 கோடி ரிஷப் பண்ட்?

லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணி, பஞ்சாப்…

1 hour ago

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு…இன்று வக்பு வாரிய திருத்த சட்ட மசோதா தாக்கல்!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த…

1 hour ago

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

9 hours ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

10 hours ago