தனது ட்வீட் மூலம் சிம்புவிற்கு பதிலடி கொடுத்துள்ளாரா இயக்குனர் வெங்கட் பிரபு!?

Default Image

இயக்குனர் வெங்கட் பிரபு – சிம்பு கூட்டணியில் உருவாக இருந்த மாநாடு படம் சில காரணங்களால் ட்ராப் ஆனது. இந்த படத்தில் இருந்து சிம்புவிடம் ஒருமனதாக பேசி விலக்கி விட்டதாக படக்குழு அறிவித்தது.

ஆனால் திடீரென சிம்பு தானே இயக்கி நடித்து தனது குடும்ப நிறுவனமான சிம்பு சினி ஆர்ட்ஸ் மூலம் மகாமாநாடு  எனும் படத்தினை எடுக்க உள்ளதாகவும், அந்த படத்தின் பட்ஜெட் 125 கோடி எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு  தனது டிவிட்டர் பக்கத்தில் வம்பை வளர்க்க வேண்டாம் அன்பை வளர்ப்போம் வந்தே மாதரம் என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. வம்பை வளர்க்க வேண்டாம் என சிம்புவை குறிப்பிடுகிறாரா என ரசிகர்கள் கிசுகிசுத்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்