மோடிக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கம் போல நடத்தி வருகிறோம்! – மம்தா கடும் தாக்கு!

Default Image

மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால் தேர்தல் பிரச்சாரம் படு காரசாரமாக நடைபெற்று வருகிறது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜீ தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடியை கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.

அவர் மேற்கு வங்கம் மாநிலத்தில், தேப்ரா பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட அவர், கூறுகையில் ‘ இந்தியாவில் இருந்து வெள்ளையர்களை வெளியேற்ற வெள்ளையனே வெளியேறு இயக்கத்தினை நடத்தியது போல, தற்போது மோடிக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

தற்போது நாடே அவசரகால நிலை போல நிலை மாறி வருகிறது. மக்கள் தங்கள் நினைப்பதை வெளியில் கூற முடிவதில்லை. மோடி தன்னை டி கடை வியாபாரி என கூறி வந்தார் ஆனால் அது பொய். அது போல தற்போது தன்னை காவலாளி என கூறி வருகின்றார். அதுவும் பொய். நமது நாட்டிற்கு காந்தி, சுபாஷ் சந்திர போஸ், ராஜேந்திர பிரசாத் போன்ற தலைவர்கள் தான் தேவை. ஆனால் மோடி நாதுராம் கோட்ஸே பற்றி பேசி வருகிறார்கள். என தனது பிரச்சார கூட்டத்தில் பேசினார்,.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்