பவர் ஸ்டாருடன் மணக்கோலத்தில் இருக்கும் வனிதாவின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமாகியவர் வனிதா. இதன் பிறகு முன்னணி சமையல் நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு அந்நிகழ்ச்சியின் முதலிடத்தை வெற்றிபெற்றார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் நடந்து கொண்டிருக்கும் பிக்பாஸ் ஜோடி நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார்.
இதில் மற்றவர்களுடன் ஒப்பிடுவதை தாங்க முடியாமல் அந்நிகழ்ச்சியின் நடுவரான ரம்யா கிருஷ்ணனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவ்விடத்தை விட்டு வெளியேறுகிறார். இதன் முழுப்பகுதி வரும் ஞாயிற்றுகிழமை வெளியாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவர் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்துகொண்டார். பல பிரச்சனைகளுக்கு பின்னர் அவரை விட்டு பிரிந்துவிட்டார்.
மேலும், தற்போது இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசனுடன் மாலையும் கழுத்துமாக இருக்க கூடிய புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே ஜோதிடர் ஒருவர் வனிதாவின் ஜாதகத்தில் இன்னும் திருமண யோகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். அதிலும் எஸ் என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் உள்ள நபருடன் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் வனிதா பவர் ஸ்டார் உடன் மணக்கோலத்தில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டது சமூக வலைத்தளத்தில் பேசும்பொருளாக மாறியுள்ளது. நான்காவது திருமணம் செய்துகொண்டாரா? இல்லை ஏதும் படப்பிடிப்புகளுக்காக எடுக்கப்பட்டதா? என்று தெரியாமல் பலரும் அவர்களது கருத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
சென்னை : சாதி சான்றிதழ்களில் சாதியின் பெயர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு…
உதகை : ஊட்டியில் ஆளுநர் கூட்டும் துணைவேந்தர்கள் கூட்டம் ஏப்ரல் 25,26 தேதிகளில் நடைபெறும் பல்கலைக்கழகங்களின் வேந்தர் என குறிப்பிட்டு…
சாங்காய் : தொழில்நுட்பத்தில் புதிய உச்சங்களைப் பற்றிப் பேசும் போதெல்லாம், சீனாவின் பெயர் அழைக்கப்படாத நாளே இல்லை. மனிதர்கள் செய்யும்…
சென்னை : இந்த ஆண்டு ஐபிஎல் கிட்டத்தட்ட பாதி முடிந்துவிட்ட நிலையில், எந்தெந்த அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற…
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை மீதான…
சென்னை : தமிழகத்தில், ஜாக்டோ-ஜியோ போன்ற அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த…