லிமை திரைப்படமும் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இயக்குனர் எஸ்.எஸ் ராஜமௌலி பாகுபலி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அடுத்ததாக நடிகர் ராம் சரண், ஜூனியர் என் டி ஆரை வைத்து ஆர்.ஆர்.ஆர் என்ற படத்தை இயக்கி வருகிறார். பிரமாண்ட பொருட் செலவில் உருவாகும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் எம் எம் கீரவாணி இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படத்திலிருந்து வெளியான முதல் பாடல் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் கடந்த மாதம் வெளியானது.
இந்த நிலையில், நடிகர் அஜித் குமார் தற்போது இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து வெளியான “நாங்க வேற பாடல்” ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் அடுத்த அப்டேட்டாக வலிமை படத்தின் ரிலீஸ் தேதிகாக காத்துள்ளனர். இந்த நிலையில், தற்போது கிடைத்த தகவலை என்னவென்றால் வலிமை திரைப்படமும் வரும் அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி வெளியீட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
இதனால் வலிமை திரைப்படமும் ஆர்ஆர்ஆர் திரைப்படமும் ஒரே நாளில் வெளியாகுமா என்று ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர். வலிமை திரைப்படம் அக்டோபர் 13-ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…