நடிகர் வடிவேலு தனது பெயரை கெடுக்கும் வகையில் பேசியதற்காக நடிகர்களான சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோரின் மீது புகார் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார்.இந்த நிலையில் சமீப காலமாக இவருக்கும் நடிகர் சிங்கமுத்துவிற்கும் பல பிரச்சனைகள் நடந்து வந்தது. இருவருமே ஒருவருக்கொருவர் தாக்கி வந்த நிலையில், சமீபத்தில் நடிகரான மனோபாலா அவர்கள் சிங்கமுத்து அவர்களை பேட்டி எடுத்துள்ளார்.
அப்போது வடிவேலு அவர்களை குறித்து பல தகவல்களை கூறியுள்ளார் அதில் வடிவேலுவை அவர் தான் ஆளாக்கி விட்டதாகவும், வடிவேலு அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றும், அவருக்கு இடம் எல்லாம் வாங்கி கொடுத்து பெரியாள் ஆக்கி விட்டது நான் தான் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வடிவேலு தன்னுடைய பெயரை தேவையில்லாமல் பயன்படுத்தி கெடுக்கும் வகையில் பேசியதற்காக மனோபாலா மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் மீது புகார் செய்துள்ளார். தற்போது இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…