சிங்கமுத்து மேல் வைகை புயல் வடிவேலு பரபரப்பு புகார்.!

Default Image

நடிகர் வடிவேலு தனது பெயரை கெடுக்கும் வகையில் பேசியதற்காக நடிகர்களான சிங்கமுத்து மற்றும் மனோபாலா ஆகியோரின் மீது புகார் செய்துள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகர்களில் முன்னிலையில் இருந்தவர் வைகை புயல் என்று அழைக்கப்படும் வடிவேலு. இவர் கடைசியாக ராகவா லாரன்ஸின் சிவலிங்கா படத்திலும், விஜய்யின் மெர்சல் படத்திலும் நடித்திருந்தார்.இந்த நிலையில் சமீப காலமாக இவருக்கும் நடிகர் சிங்கமுத்துவிற்கும் பல பிரச்சனைகள் நடந்து வந்தது. இருவருமே ஒருவருக்கொருவர் தாக்கி வந்த நிலையில், சமீபத்தில் நடிகரான மனோபாலா அவர்கள் சிங்கமுத்து அவர்களை பேட்டி எடுத்துள்ளார்.

அப்போது வடிவேலு அவர்களை குறித்து பல தகவல்களை கூறியுள்ளார் அதில் வடிவேலுவை அவர் தான் ஆளாக்கி விட்டதாகவும், வடிவேலு அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது என்றும், அவருக்கு இடம் எல்லாம் வாங்கி கொடுத்து பெரியாள் ஆக்கி விட்டது நான் தான் என்றும் கூறியுள்ளார். இந்த நிலையில் தற்போது வடிவேலு தன்னுடைய பெயரை தேவையில்லாமல் பயன்படுத்தி கெடுக்கும் வகையில் பேசியதற்காக மனோபாலா மற்றும் சிங்கமுத்து ஆகியோரின் மீது புகார் செய்துள்ளார். தற்போது இந்த செய்தி சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்