எதற்கும் துணிந்தவன் படத்தில் வடசென்னை பட நடிகர்.?

Default Image

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் சரண் சக்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா தற்போது நடித்துள்ள திரைப்படம் “எதற்கும் துணிந்தவன்”. இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை பிரியங்கா அருள் மோகன் நடித்து வருகிறார். படத்தில், ராதிகா, சத்யராஜ், சரண்யா, சூரி, தேவதர்ஷினி, போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். இசையமைப்பாளர் டி. இமான் இசையமைக்கும் இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

நேற்று “எதற்கும் துணிந்தவன்” திரைப்படத்தின் 51 நாட்கள் கொண்ட படப்பிடிப்பு நிறைவடைந்தது. வெயில், மழை பாராமல் பணியாற்றிய படக்குழுவினருக்கு தனது நன்றியை இயக்குனர் பாண்டிராஜ் தெரிவித்திருந்தார். படத்திலிருந்து வெளியான மூன்று லுக் போஸ்டர்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்பை அதிகமாக்கியது என்றே கூறலாம்.

இந்நிலையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தில் சகா, வடசென்னை, நெற்றிக்கண் ஆகிய படங்களில் நடித்த சரண் சக்தி முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

etharkum thuninthavan

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்