கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதிலும் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக பாதிப்பை ஏற்படுத்திய வண்ணம் தான் இருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனாவில் தாக்கத்தை கருத்தில் கொண்டு பிறநாட்டு பயணிகள் தங்கள் நாட்டிற்குள் வர தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தற்போது கொரோனாவின் தாக்கம் சற்று குறைந்து வருவதால், தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் வரலாம் என தளர்வுகளை சில நாடுகள் கொடுக்கிறது.
அந்த வகையில் தற்போது பிரான்ஸ் நாட்டிலும் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தங்கள் நாட்டிற்குள் சுற்றுலாவிற்கு வரலாம் என கூறப்பட்டது. இது குறித்து பிரான்ஸ் நாட்டின் அதிகாரிகள் கூறும் பொழுது, ஏற்கனவே பிரான்ஸ் நாட்டிற்குள் வர சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இனிமேல் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டிற்குள் சுற்றுலாவிற்காக வருவதற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரான்ஸ் நாட்டிற்குள் சுற்றுலா பயணிகளுக்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்தாலும், புதிய வகை கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் உள்ள சுற்றுலா பயணிகள் வருவதற்கு பிரான்ஸில் தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள மற்ற பிற நாடுகளில் உள்ள மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் வரலாம் எனவும், ஐரோப்பிய நாடுகளில் இருந்து வரக்கூடியவர்களுக்கு குரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் தெரிவித்துள்ளனர்.
சென்னை : திருப்பதியில் வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு. மீன் எண்ணெய் போன்றவை கலப்பதாக எழுந்துள்ள புதிய சர்ச்சை, நாடு முழுவதும்…
சென்னை : கடந்த 3 நாள்களாக குறைந்து வந்த தங்கம் விலை, இன்று மீண்டும் உயர்ந்து சவரன் ரூ.55,000-ஐ கடந்தது.…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகியது பெரிய அளவில் பேசுபொருளாகும் விவகாரமாக வெடித்துள்ள நிலையில், இந்த…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான், அடுத்ததாக திமுக கட்சியை வழிநடத்த உள்ளார். அவரை…
சென்னை : விழுப்புரம் விக்கிரவாண்டியில் அக்.27ல் தவெக மாநாடு நடைபெற உள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார். இது தொடர்பாக…
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…