வாட்ஸ்அப்-க்கு பதிலாக “சிக்னல்” யூஸ் பண்ணுங்க., எலோன் மஸ்க் பரிந்துரை.!

Published by
பாலா கலியமூர்த்தி

உலகின்முதல் பணக்காரராக அமேசான் சி.இ.ஓ, டெல்சா நிறுவனர் எலோன் மஸ்க்கும் “யூஸ் சிக்னல்” என்று சிக்னல் செயலிக்கு பரிந்துரைத்துள்ளார்.

வாட்ஸ் அப் நிறுவனம் ஒரு புதிய நிபந்தனையை கொண்டு வந்துள்ளது. அதாவது, வாட்ஸ் அப் தன் பயனாளர்களுக்கு அனுப்பிய அறிவிப்பில் பயனாளர்கள் தங்கள் தொலைபேசி எண், தொடர்பு எண்கள், இருப்பிட விவரம் ஆகியவற்றை பேஸ்புக் உள்ளிட்ட தங்கள் நிறுவன ஊடகங்களில் பகிர அழைப்புவிடுத்தது. அதுவும், பிப்ரவரி 8ம் தேதிக்குள் இந்த Terms and Privacy Policy Updates-க்கு ஏற்றுக் கொள்ளவில்லை எனில் பயனாளர்கள் செயலியில் நுழைய முடியாது என்று கூறப்படுகிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் iOS-ல் உபயோகிக்கும் அனைவருக்கும் பொருந்தும்.

வாட்ஸ் அப்பின் இந்த முடிவுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. வாட்ஸ் அப் புதிய தனியுரிமை கொள்கைக்கு (New Privacy Policy) எதிர்ப்பு தெரிவித்து பயனாளர்கள் சமுக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர். வாட்ஸ் அப் கணக்கை நீக்கிவிட்டு டெலிகிராமுக்கு மாறுவதாகவும் பதிவு செய்து, ட்விட்டரில் #WhatsappNewPolicy என்ற ஹாஷ் டேக்கை ட்ரெண்ட் செய்தும் வருகின்றனர். இதன் காரணமாக பயனாளர்கள் வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறி மாற்று செயலிகளை பயன்படுத்த நேரிட்டுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. Signal

இந்நிலையில், உலகின் நம்பர் 1 பணக்காரராக அமேசான் சி.இ.ஓ, டெல்சா நிறுவனர் எலோன் மஸ்க்கும் “யூஸ் சிக்னல்” என்று சிக்னல் செயலிக்கு பரிந்துரைத்துள்ளார். இதனை அவரது ட்விட்டர் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார். பயனாளர்களின் தனியுரிமையை மையமாகக் கொண்ட சிக்னல் (மெசேஜ் அப்) எனப்படும் மற்றொரு செயலியை பயன்படுத்துமாறு மஸ்க் தெரிவித்துள்ளார். இந்த செயலி பரவலாக உள்ளது. இதனை பாதுகாப்பு ஆலோசகர்கள், பத்திரிகையாளர்கள், தனியுரிமை ஆராய்ச்சியாளர்கள் என பல வகையான பயனாளிகள் இந்த சிக்னல் செயலியை பரவலாக பயன்படுத்துகிறார்கள்.

வாட்ஸ் அப் செயலியை போல் (end-to-end encryption) பாதுகாப்பு வசதி கொண்டது. அதாவது, 3rd party apps-ல் உங்களின் விவரங்கள் பகிரப்படாது. எலோன் மஸ்க்கின் பரிந்துரையால், சிக்னல் செயலி புதிய வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்றும் ஒரு பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் புதிய பயனாளர்கள் அதிகரிப்பதால் செல்போன் எண்ணிக்கை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய நிபந்தனையால் இந்த அதிகரிப்பு காணப்படுகிறதுஎன்று குறிப்பிட்டுள்ளது. இதனிடையே, 2014-ல் ஃபேஸ்புக் நிறுவனம் வாட்ஸ் அப்-ஐ வாங்கியது குறிப்பிடத்தக்கது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

5 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

5 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

7 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

8 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

8 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

8 hours ago