அமெரிக்கா:அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் பென்சில்வேனியா மாகாணத்தின் பொது வீட்டுவசதி ஆணையத்திற்குச் சொந்தமான நகரின் ஃபேர்மவுண்ட் சுற்றுப்புறத்தில் உள்ள மூன்று அடுக்குமாடி கொண்ட குடியிருப்பு ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து,தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் இரண்டாவது மாடியில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த நீண்ட நேரம் கடுமையாக போராடினர்.அதன்பின்னர்,தீ அணைக்கப்பட்டது.ஆனால், இந்த தீ விபத்தில் 7 குழந்தைகள் உட்பட 13 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும்,தீ விபத்தில் படுகாயமடைந்த இரண்டு பேரை தீயணைப்பு துறையினர் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த தீயணைக்கும் கருவிகள் வேலை செய்யாமல் போனதே,உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…