அமெரிக்காவில் புத்தாண்டு தினத்தன்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள குல்ஃபோர்ட் நகரில் புத்தாண்டை முன்னிட்டு விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விருந்து நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டனர். புத்தாண்டு பிறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு திடீரென சிலர் அங்கிருந்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
இந்த சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை:
துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என கல்ப்போர்ட் காவல்துறைஅதிகாரி கிறிஸ் ரைல் தெரிவித்தார். இந்த மோதலை தொடர்ந்து 50-க்கும் மேற்பட்ட முறை துப்பாக்கியால் சுடப்பட்டதாக கூறப்படுகிறது. துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து பலர் ஓடுவதைக் காண முடிந்தது. இந்த சம்பவத்தில் எத்தனை பேர் ஈடுபட்டுள்ளனர் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…