சீனாவுக்கு அமெரிக்க நிபுணர்கள் குழுவை அனுப்ப முடிவு செய்துளேன் என்று அமெரிக்க அதிபர் தெரிவித்துள்ளார்.
உலக முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது கொரோனா வைரஸ்.முதலில் சீனாவில் உள்ள உகான் மாகாணத்தில் தான் கொரோனா வைரஸ் பரவியது.இதன் பின்னர் தான் உலக நாடுகளை இந்த வைரஸ் தாக்கி வருகிறது.ஆனால் கொரோனா வைரசை சீனா தான் உருவாக்கியுள்ளது என்று அமெரிக்கா சந்தேகப்பட்டு வருகிறது. உஹான் மருத்துவ ஆய்வகத்தின் வைரஸ் தொடர்பான பரிசோதனையின் போது கொரோனா வெளிப்பட்டிருக்கலாம் என அமெரிக்கா சந்தேகப்படுவதாகவும், அதனை உறுதிபட தெரிவிக்க ஆதாரங்கள் ஏதும் இல்லையென்றும் கூறப்படுகிறது.
இதன் விளைவாகத்தான் அமெரிக்க அதிபர் டிரம்ப் கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று கூறி வந்தார்.இதற்கு சீனா தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.இந்த சமயத்திலும் இரு நாடுகளிடையே பனிப்போர் அதிகரித்து தான் வருகிறது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுகையில்,கொரோனா வைரஸ் சீனாவில் எப்படி பரவியது உள்ளிட்டவை குறித்து விசாரணை நடத்த சீனாவுக்கு அமெரிக்க நிபுணர்கள் குழுவை அனுப்ப முடிவு செய்துளேன்.இதற்காக சீனாவிடம் நாங்கள் அனுமதி கோரினோம்.ஆனால் அவர்கள் பதில் அளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : ஏ.ஆர்.ரஹ்மான் திடீரென உடல்நிலை சரியில்லாமல் இன்று காலை 7:30 மணியளவில் நெஞ்சு வலி காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில்…
சென்னை : தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணாமாக, தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,…
பாகிஸ்தான் :பலுசிஸ்தான் விடுதலைப் படை (Baloch Liberation Army - BLA) பாகிஸ்தானின் நோஷ்கி பகுதியில் பாகிஸ்தான் ராணுவப் படைகளின்…
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…