உக்ரைனுக்கு செல்லத் தயார் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!

Default Image

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு செல்ல அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தயாராக இருப்பதாக தகவல். 

உக்ரைன் மீது ரஷ்ய கடுமையான தாக்குதலை நடத்தி வந்தபோது உக்ரனுக்கு ராணுவ மற்றும் நிதி உதவிகள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை அமெரிக்க வழங்கியது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தாக்குதலில் ஈடுபட்ட ரஷ்யாவுக்கு பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தது அமெரிக்கா. இந்த நிலையில், போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு செல்லத் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் லாயிடு ஆஸ்டின், வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் பைடன் உக்ரைனுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் கூறப்படுகிறது. இதனிடையே, உக்ரைனுக்கு தொடர்ந்து ஆயுத உதவிகளை அளித்து வந்தால் அமெரிக்கா கணிக்க முடியாத விளைவுகளை சந்திக நேரிடும் என்று ரஷ்யா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்