அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முதன்முறையாக தற்போது முகக்கவசம் அணிந்துள்ளார்.
உலக அளவில் அமெரிக்காவில் தான் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது.தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவில் 32,90,994 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.1,36,621 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸின் தாக்கம் அதிகம் இருந்த வந்த சமயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணிவதை தவிர்த்து வந்தார்.
டிரம்பின் இந்த செயலை பலரும் விமர்சனம் செய்து வந்தனர் .குறிப்பாக ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் ,”முகக்கவசம் அணியாமல் மரணத்தை வரவைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முட்டாள்” என கூறினார். இந்நிலையில் வாஷிங்டன்னில் உள்ள மருத்துமனையில் காயமடைந்த வீரர்களை பார்வையிட அமெரிக்க அதிபர் சென்றார்.அப்பொழுது,அதிபர் டிரம்ப் முகக்கவசம் அணிந்து வந்தார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…