கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் விமான சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், அமெரிக்கா-இந்தியா இடையான விமான சேவைகள் ஜூலை 23 முதல் தொடங்கவுள்ளது.
சீனாவில் பரவதொடங்கிய கொரோனா வைரஸ், தற்பொழுது உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. அந்த வைரஸின் தாக்கத்தால் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக, இந்தியாவில் அனைத்து சர்வதேச விமானங்களுக்கு இந்திய அரசு தடை விதித்துள்ள நிலையில், ஜூலை 23 முதல் அமெரிக்க-இந்தியா இடையான பயணிகள் விமானச் சேவைகளை தொடங்குவதற்கு அமெரிக்க விமான நிறுவனங்களுக்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக அமெரிக்க விமான போக்குவரத்துக்கு துறை தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவுக்கு இயக்கப்படும் சார்டர் சேவை விமான கேரியர்களை அனுமதிப்பதில்லை எனவும், “நியாயமற்ற மற்றும் பாரபட்சமான நடைமுறைகளில்” இந்தியா ஈடுபடுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியது.
இந்திய நாட்டின் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், சர்வதேச சிவில் விமான நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்துவதற்கு முயன்று வருகின்றது எனவும், சில விமான நிறுவனங்களில் இருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளுடன் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
திருச்செந்தூர் : ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழ்நாட்டில் சனாதன தர்ம யாத்திரையை தொடங்கியுள்ளார். அதன்படி, தமிழகத்தில் நான்கு…
டெல்லி : மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அம்மாநில முதல்வர் பிரேன் சிங் ராஜிநாமா செய்து 5…
சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…
பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…
சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…
சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…