தலிபான் தலைவருடன் அமெரிக்க உளவுத்துறை தலைவர் ரகசிய சந்திப்பு …!

Published by
Rebekal

தலிபான் தலைவருடன் அமெரிக்க உளவுத்துறை தலைவர் வில்லியம் பர்ன்ஸ் ரகசியமாக சந்தித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியுள்ளதால்  தலிபான்கள் நாட்டை கைப்பற்றி உள்ளனர். மேலும், தலிபான்கள் விரைவில் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். எனவே அந்நாட்டு மக்கள் பலரும் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வருகின்றனர். மேலும், ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தங்கள் நாட்டு மக்களை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்கா, இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.

ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேறிவிட வேண்டும். இல்லை என்றால் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் தலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், கூடுதலாக கால அவகாசம் தேவைப்படும் என அமெரிக்க படைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது தலிபான் தலைவர்களில் முக்கிய நபரான முல்லா அப்துல் கானி என்பவரை அமெரிக்க உளவுத் துறையின் தலைவர் வில்லியம் பர்ன்ஸ் அவர்கள் நேரில் சந்தித்து பேசி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த சந்திப்பு திங்கள்கிழமை நடைபெற்றதாகவும், இந்த சந்திப்பின்போது ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க மற்றும் பிற நாட்டு மக்களை வெளியேற்றுவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

Published by
Rebekal

Recent Posts

“தெர்மாகோல்., தெர்மாகோல்., என ஓட்டுகின்றனர்!” செல்லூர் ராஜு வருத்தம்! 

“தெர்மாகோல்., தெர்மாகோல்., என ஓட்டுகின்றனர்!” செல்லூர் ராஜு வருத்தம்!

சென்னை : தமிழக பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த விவாதத்தின் போது சட்டமன்ற…

53 seconds ago

நாய் வளர்ப்போர் கவனத்திற்கு., ரூ.1000 அபராதம்! இதை செய்ய மறந்துடாதீங்க..,

சென்னை : தமிழ்நாட்டில் கடந்த 75 நாட்களில் 1 லட்சத்து 18 ஆயிரம் பேர் வெறிநாய்க் கடியால் பாதிக்கப்பட்டதாக தகவல்கள்…

31 minutes ago

“மகா கும்பமேளா., இந்தியாவின் பிரமாண்டத்தை உலகமே பார்த்தது!” பிரதமர் மோடி பெருமிதம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இராண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் உறுப்பினர்களின் கேள்விகள் , அதற்கான…

36 minutes ago

500 குழந்தைகள் மையங்கள் அமைக்க ஏற்பாடு – அமைச்சர் கீதா ஜீவன் பேரவையில் தகவல்.!

சென்னை : 2025 - 26ம் நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை மீதான 2ம் நாள் விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில்,…

50 minutes ago

தொகுதி மறுசீரமைப்பு : “நாங்கள் தினமும் இதை செய்கிறோம்., ஏற்க மறுகிறாரக்ள்” கனிமொழி கண்டனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டாம் கட்ட அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் திமுக சார்பில் அதன் நாடாளுமன்ற…

1 hour ago

சென்னையை அதிர வைத்த இரட்டை கொலை! அடுத்தடுத்து 13 பேர் கைது., ரகசிய விசாரணை!

சென்னை : நேற்று முன்தினம் சென்னை கோட்டூர்புரம் அருகே நிகழ்ந்த இரட்டை கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 hours ago