60 தோட்டாக்கள் பறிமுதல்… திகைக்க வைக்கும் அமெரிக்க கொலைகார இளைஞனின் ஆதாரங்கள்..

Default Image

அமெரிக்க சுதந்திர தினத்தில் துப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்த இளைஞனின் காரில் மேலும் 60 தோட்டாக்கள் இருந்துள்ளது என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

கடந்த திங்கள்கிழமை (ஜூலை 4) அன்று அமெரிக்கா முழுவதும் சுதந்திர தினம் கொண்டாடி கொண்டிருந்த போது, சிகாகோ நகரின் முக்கிய பகுதியில் துப்பாக்கி சூடு நடைபெற்றது.

22 வயது மதிக்கதக்க ஒரு இளைஞன் திடீரென தான் வைத்திருந்த துப்பாக்கியால் கூட்டத்தை நோக்கி சுட ஆரம்பித்தான். இதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெண் வேடம் கொண்டு தப்பித்த அந்த கொலைகார இளைஞனை போலீசார் திங்கள் அன்று மாலை கைது செய்துவிட்டனர். பின்னர் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. அதாவது அவன் கொண்டு வந்த காரில் மேலும் 60 தோட்டாக்கள் இருந்துள்ளது. அவனை பிடிக்காமல் தாமதமாகி இருந்தால் இன்னும் ஒரு கொலைகார தாக்குதத்தலை நடத்தி இருப்பான் என போலீஸ் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்