ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கைக்கு உத்தரவு ! பைடனின் வெற்றியை பாதிக்குமா ?

Published by
Venu

டிரம்ப் தரப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த அம்மாகாண அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தேர்தல் :

கடந்த 3-ஆம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கையை உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. வாக்கு எண்ணிக்கையில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடனுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.ஆனால்  ஒரு சில மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை இழுபறியில் இருந்தது. அதன்படி, அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நிலவியது.இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

டிரம்பின் அடாவடி :

இதனிடையே டிரம்ப் கடந்த 4-ஆம் தேதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,  அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடைபெற்றது என்று டொனால்ட் டிரம்ப் கூறினார்.மேலும் தேர்தலில் மோசடி நடைபெற்றதால் நீதிமன்றத்தை அணுகி வாக்கு எண்ணிக்கையை நிறுத்துவேன் என்றும் கூறினார்.

ஜோ பைடன் அணியினர் பேரணி : 

ஆனால் டொனால்ட் டிரம்ப் உச்சநீதிமன்றம் சென்றால் வழக்கை சந்திக்க ஜோ பைடன் தரப்பு தயார் என்று தெரிவித்தது .ஆனால் பல மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் வெளியாக தாமதம் ஏற்பட்டது.   அதன்படி, பல முக்கிய மாகாணங்களில் தேர்தல் முறைகேடு நடந்துள்ளது என்றும், அதனால் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று டிரம்ப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது.ஆனால் அந்த மாகாணங்களில்  டிரம்ப் தரப்பின் வழக்குகளை நீதிமன்றங்கள் நிராகரித்தன.

வாக்குகளை எண்ண வேண்டும் VS எண்ண வேண்டாம் :

ஒரு புறம் டிரம்ப் வழக்கினை தொடுத்து வாக்கு எண்ணிக்கை வேண்டாம் என்று கூறினாலும் , பைடன் தரப்பு வாக்கு எண்ணிக்கை  வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.இதன் வெளிப்பாடாக  ஒவ்வொரு வாக்கையும் நிச்சயம் எண்ண வேண்டும் என்று  நியூயார்க்கில் ஜோ பைடன் ஆதரவாளர்கள் பேரணி நடத்தினர்னார்கள். 

இறுதியாக பைடன் வெற்றி :

 கடந்த 7-ஆம் தேதி ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வு செய்யப்பட்டார் .அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.பைடனை எதிர்த்து போட்டியிட்ட டிரம்ப் 217 சபை ஓட்டுக்களை  மட்டுமே பெற்றார்.ஆகவே ஜோ பைடன், அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி தனது அதிபர் பதவியேற்க உள்ளார்.

மறு எண்ணிக்கை :

இந்நிலையில் ஜார்ஜியாவில் மறுவாக்கு எண்ணிக்கை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து வாக்குகளும்   மறுபடியும் எண்ணப்படும் என ஜார்ஜியா மாகாணம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .டிரம்ப் தரப்பினர் விடுத்த கோரிக்கையை அடுத்து ஜார்ஜியாவில் மட்டும் மறுவாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று . ஏற்கெனவே பைடன் வெற்றி பெற்றுவிட்டதால், ஜார்ஜியாவின்  மறுவாக்கு எண்ணிக்கை முடிவு அவரது வெற்றியை பாதிக்காது.

Published by
Venu

Recent Posts

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

LSG vs PBKS : சொந்த மண்ணில் வீழ்ந்தது லக்னோ! 17வது ஓவரில் பஞ்சாப் அசத்தல் வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…

48 minutes ago

LSG vs PBKS : தட்டுத்தடுமாறி டார்கெட் வைத்த லக்னோ! பஞ்சாப் ஜெயிக்க 172 ரன்கள் தேவை.!

லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…

2 hours ago

LSG vs PBKS : லக்னோவுக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு!

லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…

4 hours ago

வடிவேலு – சுந்தர்.சியின் அடுத்தடுத்த காமெடி அட்டகாசம்.., கேங்கர்ஸ் படத்தின் புதிய ட்ரைலர் இதோ…

சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…

5 hours ago

“எங்கள் ஊரில் தமிழ், தெலுங்கு, மலையாளம் சொல்லி தருகிறோம்..,” யோகி ஆதித்யநாத் பெருமிதம்!

லக்னோ :  தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…

6 hours ago

வழக்கு தொடர்ந்த பாஜக நிர்வாகி.. ‘எம்புரான்’ படத்திற்கு தடை விதிக்க கேரள உயர்நீதிமன்றம் மறுப்பு.!

கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…

6 hours ago