அமெரிக்காவில்அதிபருக்கான தேர்தல் நெருங்கும் நிலையில், முதன்முறையாக அதிபர் டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் நேருக்கு நேராக சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. அங்கு, கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், முதன்முறையாக அதிபர் டிரம்ப், ஜோ பைடன் ஆகியோர் நேருக்கு நேராக சந்தித்து விவாதிக்கவுள்ளனர்.
அதன்படி, டிரம்ப் மற்றும் ஜோ பைடன் நடத்தும் முதல் நேருக்கு நேர் விவாதம், ஹிகோ மாகாணத்தில் க்ளைவ் லாண்டில் செப்டம்பர் 29-ம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து அடுத்தடுத்த நடக்கவுள்ள விவாதங்கள், அக்.15-ம் தேதி, ப்ளோரிடாவிலும், அக்.22-ம் தேதி டென்னிஸில் நடைபெறவுள்ளது. மேலும் துணை அதிபருக்கான விவாதம், அக். 7-ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
குஜராத் : உலக விலங்குகள் தினமான மார்ச் 3, 2025, அன்று பிரதமர் நரேந்திர மோடி, குஜராத்தின் ஜிர் வனவிலங்கு…
சென்னை : தமிழ்நாட்டில் மக்களவைத் தொகுதிகள் மறுசீரமைப்பு செய்ய எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற மார்ச் 5, 2025 அன்று அனைத்து…
நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நாகப்பட்டினம் மாவட்டத்தில் மக்கள் நல திட்டங்கள் வழங்கும் விழாவில் பங்கேற்றுள்ளார். இதில்…
சென்னை : இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியுள்ளது. இதனை 8.21 லட்சம் மாணவ, மாணவியர்கள்…
துபாய் : சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் தொடங்குவதற்கு முன்பே இந்திய அணியில் கீப்பராக எந்த வீரர் விளையாடப்போகிறார் என்கிற கேள்விகள்…
லாஸ் ஏஞ்செல்ஸ் : ஆண்டுதோறும் சிறந்த திரைக்கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் ஆஸ்கர் சினிமா விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அமெரிக்கா…