டென்னிஸ் மைதானத்தை கொரோனா மருத்துவமனையாக மாற்றியது அமெரிக்கா.!

Default Image

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, ஈரான் போன்ற நாடுகளை மிஞ்சியது அமெரிக்கா, நாளுக்கு நாள் இங்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருகிறது. கொரோனா வைரஸுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ள நிலையில், பில்லி ஜேன் கிங் தேசிய டென்னிஸ் மைதானத்தை கொரோனா மருத்துவமனையாக்க நடவடிக்கைகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன. 

நியூயார்க்கில் உள்ள ஆர்த்துர் அஷே மைதானத்தில் தான் யூ எஸ் ஓபன் எனப்படும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 17,000 ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் வசதி கொண்ட இந்த மைதானம், உலக பிரபலமானதாகும். இந்த நிலையில் மையத்தின் ஒரு பகுதி 350 படுக்கைகள் கொண்டதாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே நியூயார்க்கில் கொரோனா தொற்றின் தாக்கம் அதிகரித்து வருவதையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. நியூயார்க்கின் மத்திய பூங்காவில் 68 படுக்கைகள் கொண்ட தற்காலிக மருத்துவமனையின் கட்டுமானமும் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்