போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கு விதமாக செயல்படுவதாக பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்களிடம் அமெரிக்க காங்கிரஸ் 4 மணிநேரமாக விசாரணை நடத்தியது.
பேஸ்புக், கூகுள், ஆப்பிள், அமேசான் நிறுவனங்கள், தங்களின் போட்டி நிறுவனங்களின் வளர்ச்சியை தடுக்கும் விதமாக செயல்படுவதாக புகார்கள் எழுந்து கொண்டே வந்தது. இதனையடுத்து அமெரிக்க காங்கிரஸ் நிர்வாகிகள், அந்தந்த நிறுவன நிர்வாகிகளிடம் காணொளி மூலம் விசாரணை நடத்தினார்கள்.
அப்பொழுது அவர்களிடம் காங்கிரஸ் கமிட்டி, 90% இணையத்தை கட்டுப்படுத்தும் அமெரிக்காவில் பேஸ்புக், அமேசான், ஆப்பிள், கூகுள் ஆகிய நிறுவனங்கள்தான் கட்டுப்படுத்துகிறதாகவும், தங்களின் வளர்ச்சிக்காகக் பிற நிறுவனங்களை முடக்கியும், மக்களின் தேர்வு செய்யும் உரிமையை இவர்கள் பறிக்கிறதாகவும் காங்கிரஸ் கமிட்டி தெரிவித்தது.
காங்கிரஸ் கூறியதற்கு மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சை, டிக் கூக், ஜெப் பெஸோஸ் மறுப்பு தெரிவித்தனர். மேலும், அந்தந்த நிறுவனங்களை பற்றி பல குற்றச்சாட்டுகளை அமெரிக்க காங்கிரஸ் முன்வைத்தது.
அதன்படி, பேஸ்புக் நிறுவனம், மக்களிடையே பொய்யான செய்திகள் மற்றும் வதந்திகளை பரவுவதாக ஏற்கனவே குற்றச்சாற்றுகள் வந்ததை சுட்டிக்காட்டிய காங்கிரஸ், அதனை தடுக்கவில்லை என தெரிவித்தது. மேலும், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் நிறுவனங்களை பேஸ்புக் வாங்கிவிட்டதாகவும் குற்றம் சாட்டியது.
அதற்க்கு பதிலளித்த மார்க் ஜுக்கர்பெர்க், அமெரிக்காவில் நாங்கள் பெரிய நிறுவனம் இல்லை என தெரிவித்த அவர், தற்போது வேகமாக வளரும் ஒரே நிறுவனம், டிக்டாக்தான் என்றார். மேலும், இன்ஸ்டாகிராமை வாங்கியதன் மூலமாக, உலகின் பல சிறிய நிறுவனங்களில் முதலீடு செய்து அவர்களை வளர வைக்கிறோம் என கூறினார்.
கூகுள் நிறுவனம், தனது சர்ச்சிங் முறையில் நிறைய குறைகளை கொண்டுள்ளதாகவும், மக்களின் பல தகவல்களை திருடுகிறது. மேலும், ஒரு சாராருக்கு ஆதரவாக செயல்படுகிறது எனவும், நடுநிலையுடன் செயல்படவில்லை போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது.
இதற்க்கு சுந்தர் பிச்சை, கூகுள் சர்ச் எஞ்சின் யாருக்கும் எதிராக செயல்படவில்லை எனவும், இது AI (Artificial Intelligence) மூலம் செயல்படுகிறது என தெரிவித்தார். மேலும் கூகுள் நிறுவனம், எல்லோரும் சமமான வாய்ப்பை வழங்குவதாகவும், போட்டி இருப்பது சரிதானே என கூறிய அவர், போட்டியாளர்களை ஒருபோதும் எதிர்த்ததே இல்லை என தெரிவித்தார்.
ஆப்பிள் நிறுவனம், எந்த செயலிகளை மக்கள் பயன்படுத்த வேண்டும், மக்கள் பயன்படுத்த கூடாது எனதீர்மானிக்கிறதாகவும், அது முழுக்க முழுக்க தவறான விஷயம் என குற்றம் சாட்டியது. அதற்க்கு டிம் கூக், ஆப்பிள் நிறுவனம், செயலிகள் எதையும் கட்டுப்படுத்தவில்லை என தெரிவித்தார்.
ஆப் ஸ்டோரில் 1.7 மில்லியன் செயலிகள் உள்ளதாகவும், அவற்றுள் ஆப்பிள் செயலிகள் மொத்தமாகவே 60 செயலிகள் தான் உள்ளது என தெரிவித்தார். மேலும் பேசிய அவர், எங்களுக்கு நிறைய போட்டிகள் உள்ளதாகவும், போட்டியாளர்களை நாங்கள் சூழ்ச்சி செய்து விழ்த்துவதில்லை என தெரிவித்தார்.
அமேசான் நிறுவனம், தங்களின் போட்டி நிறுவனங்களை வளரவிடலை என குற்றம் சாற்றிய அமெரிக்க காங்கிரஸ், டயப்பர்ஸ் நிறுவனத்தை அமேசான் அழித்ததாக குற்றம் சாட்டியது. இதற்க்கு ஜெப் பெஸோஸ், அமேசான் நிறுவனம் சிறிய நிறுவனங்களை அளிப்பதில்லை, அளிப்பதும் கிடையாது என தெரிவித்தார்.
மேலும், மக்களுக்கு தேவையான பொருட்களை மட்டும் வழங்குகிறோம் என தெரிவித்த அவர், நானே சிறிய நிறுவனமாக இருந்ததுதான் அமேசானை வளர்த்துக்கொண்டு வந்தேன். மக்களுக்கு தேவையானதை கொடுப்பதால், எண்களின் போட்டி நிறுவனங்களை விட மக்கள் எங்களுக்கு அதிகளவில் ஆதரவை தருகிறார்கள் என அவர் தெரிவித்தார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…