தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

Published by
Venu

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின்  தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள்  இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனிடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர்  டொனால்ட் டிரம்ப் பேசினார் .அவர் பேசுகையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின்  தடுப்பூசி மருத்துவ பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்ய முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா உட்பட உலகெங்கிலும் 200- க்கும் மேற்பட்ட இடங்களில் சுமார் 60,000 பேர் தடுப்பூசி சோதனைகளுக்கு முயற்சிக்கப்படுவார்கள் என்று அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனம் (National Institutes for Health ) தெரிவித்துள்ளது. இதன் மூலம், ஜான்சன் & ஜான்சன் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியின் மூன்றாம் கட்ட தடுப்பூசியை பரிசோதிக்கும் உலகின் பத்தாவது மற்றும் அமெரிக்காவின் நான்காவது நிறுவனம் ஆகும். தடுப்பூசியை   பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டால் 2021 க்குள் மருந்து அவசர ஒப்புதலுக்கு தயாராக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜான்சன் & ஜான்சன்  நிறுவனத்தின் தலைவர் அலெக்ஸ் கோர்ஸ்கி கூறுகையில், “கொரோனா  தொடர்ந்து உலகெங்கிலும் உள்ள மக்களின் வாழ்க்கையை பாதித்துள்ளது. இந்த  நோயை முடிவுக்கு கொண்டுவருவதே எங்கள் ஒரே குறிக்கோள். எங்கள் நிறுவனம் தொடர்ந்து இந்த பணியில் ஈடுபட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

5 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

6 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

7 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

8 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

9 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

10 hours ago