20 ஆண்டு கால போா் முடிவு.., தாயகம் திரும்பிய அமெரிக்க இராணுவ ஜெனரல்..!

Published by
murugan

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை முன்னின்று வழி நடத்தி வந்த அமெரிக்க இராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ். மில்லர் முதலாவதாக நாடு திரும்பினார்.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவம் மேற்கொண்டு வரும் 20 ஆண்டு கால போா் ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவுக்கு வரும் என அதிபா் ஜோ பைடன் அறிவித்தார்.  சமீபத்தில் தோஹாவில் தலிபான்களுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் பேச்சுவாா்த்தை உடன்பாடு ஏற்பட்டது. அதில், ஆப்கானிஸ்தான் அரசுடன் தலிபான்கள் பேச்சுவாா்த்தையில் ஈடுபட வேண்டும்.

ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறும் அமெரிக்கப் படை மீது தாக்குதல் நடத்தக் கூடாது என முடிவுகள் எட்டப்பட்டன. இதனால், நியூயாா்க் இரட்டை கோபுர தாக்குதல் தினமான செப்டம்பர் 11-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக திரும்பப் பெறப்படும் என அதிபா் பைடன் அறிவித்திருந்தாா். இதைத்தொடர்ந்து, அமெரிக்க படையினரை திரும்பப் பெறும் நடவடிக்கையும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகளை முன்னின்று வழி நடத்தி வந்த அமெரிக்க இராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ். மில்லர் முதலாவதாக அமெரிக்க நாடு திரும்பினார். மேரிலாந்து விமான தளத்திற்கு வந்த அமெரிக்க ராணுவ ஜெனரல் ஆஸ்டின் எஸ். மில்லருக்கு அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் வரவேற்பு அளித்தார். இதற்கிடையில் அமெரிக்க படைகள் தாயகம் திரும்பும் நிலையில் ஆப்கானிஸ்தானில் முக்கிய பகுதிகளை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

கடந்த 20 ஆண்டுகளாக அமெரிக்க ராணுவத்திற்கும், தலிபான்களுக்கும் இடையே நடந்த போரில் 2400 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர் மேலும் பல ஆயிரம் பேர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago