கொரோனாவை எதிர்த்து போராட பாகிஸ்தானுக்கு , அமெரிக்கா  நிதியுதவி அறிவிப்பு.!

Default Image

சீனாவின் உகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மிரட்டி வருகிறது.கொரோனாவால் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, ஜெர்மனி, ஈரான் ஆகிய நாடுகள் அதிகமாக பாதிப்பை சந்தித்து வருகிறது.
இந்நிலையில் நம் நாட்டின் அண்டை  நாடான பாகிஸ்தானில் கொரோனாவால் 7,993  பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் பலியானவர்களின் எண்ணிக்கை  150-ஐ தாண்டியது.இதனால் கொரோனா பரவாமல் இருக்க  பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கை மேலும் 2 வாரங்களுக்கு சமீபத்தில் பிரதமர் இம்ரான்கான் நீடித்தார்.
இந்த ஊரடங்கு காரணமாக பொருளாதார இழப்பை காரணமாக பாகிஸ்தான் திணறி வருகிறது.இதன் காரணமாக ஏற்றுமதி துறை, ரசாயன உற்பத்தி ஆலைகள், மின் வணிகம்,  காகிதம், சிமெண்ட் தொழிற்சாலை ஆகியவற்றிக்கு விலக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனாவை  எதிர்த்து போராட பாகிஸ்தானுக்கு , அமெரிக்கா  நிதியுதவி அளிப்பதாக அறிவித்துள்ளது. 84 லட்சம் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.64 கோடியே 24 லட்சம்) கொடுப்பதாக அமெரிக்க தூதர் பால் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்