உறியடி ஹீரோ விஜய் குமாரின் புதிய படம் தொடக்கம்..!

Published by
Sharmi

உறியடி படத்தின் நடிகரான விஜய் குமார் தற்போது புதிய படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார்.

நடிகர் மற்றும் இயக்குனரான விஜய் குமார் உறியடி, உறியடி 2 என்ற இரண்டு படங்களை இயக்கி, அதில் அவரே கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

சூர்யாவின் நடிப்பில் வெளியான சூரரை போற்று படத்திற்கு இவர் வசனம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இவர் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியுள்ளது.

இப்படத்தை உறியடி மற்றும் உறியடி 2 படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த அறிமுக இயக்குநர் அப்பாஸ் இப்படத்தை இயக்குகிறார். மேலும்  இந்த படத்தை ரீல் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆதித்யா தயாரிக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக அர்ஷா அறிமுகமாகவுள்ளார்.

இந்த புதிய படத்தின் இசையமைப்பாளராக கோவிந்த் வசந்தா ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் சங்கரதாஸ், அவினாஷ், கார்த்திகேயன் உள்ளிட்ட நடிகர்கள் நடிக்க இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்று தொடங்கிய இப்படப்பிடிப்பு மூன்று மாதங்கள் நடைபெற உள்ளது.

Published by
Sharmi

Recent Posts

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

INDvENG : முதல் ஒரு நாள் போட்டியில் களமிறங்கவுள்ள இந்திய வீரர்கள்!

மகாராஷ்டிரா : இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20…

9 hours ago

பெரியார் குறித்து சீமான் பேச்சு! கலவரம் வேண்டாம் என அமைதியாக இருக்கிறோம் – வைகோ

சென்னை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தை பெரியார் குறித்து தொடர்ச்சியாக விமர்சித்து பேசி வருகிறார்.  இதன் காரணமாக…

10 hours ago

ரசிகர்களுக்கு மீண்டும் சர்ப்ரைஸ்! STR51 படத்தின் வெறித்தனமான அப்டேட்!

சென்னை : இன்று நடிகர் சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் படங்களின் அப்டேட்டுகள் தொடர்ச்சியாக வெளியாகி கொண்டு இருக்கிறது.…

10 hours ago

சாம்பியன்ஸ் டிராபி 2025 : டிக்கெட் வாங்கிவிட்டீர்களா? ஐசிசி கொடுத்த முக்கிய அப்டேட்!

துபாய் : ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025-க்கான கிரிக்கெட் போட்டிகள் வரும் பிப்ரவரி 19 முதல் தொடங்கி மார்ச் 9ஆம்…

11 hours ago

பிப் 5 ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்! ஓய்ந்தது பரப்புரை!

ஈரோடு :  கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் திமுக,…

11 hours ago

இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லை., தொடர் தாக்குதல்., கனிமொழி கடும் விமர்சனம்!

டெல்லி : நாடாளுமன்றத்தில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் ஒவ்வொரு கட்சி நாடாளுமன்ற குழு தலைவரும் பட்ஜெட்…

12 hours ago