தமிழில் ரீமேக்காகும் உப்பெனா படத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் உப்பெனா.இவர் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது . வைஷ்ணவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அறிமுகமான முதல் படத்திலையே வசூலை அள்ளிக் குவித்து வரும் வைஷ்ணவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.ஆம் உப்பெனா வெளியாகிய முதல் வாரத்திலேயே உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்து திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த அளவிற்கு சாதனை படைத்து வரும் உப்பெனா படத்தினை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்,அதிலும் தமிழில் ரீமேக்காகும் உப்பெனா படத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சஞ்சய் தரப்பிலிருந்து கூறியுள்ளதாவது, சஞ்சய் இயக்குனர் ஆவதற்கான படிப்பையே படித்தார் என்றும் , எனவே அவர் ஹீரோவாக அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…
தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…
தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…
கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…
நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…