தமிழில் ரீமேக்காகும் உப்பெனா படத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சுகுமாரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த புச்சிபாபு சனா இயக்கத்தில் வைஷ்ணவ் தேஜ் ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் உப்பெனா.இவர் நடிகர் சாய் தரம் தேஜின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது . வைஷ்ணவிற்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டியும் ,வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்து கடந்த பிப்ரவரி 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
அறிமுகமான முதல் படத்திலையே வசூலை அள்ளிக் குவித்து வரும் வைஷ்ணவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.ஆம் உப்பெனா வெளியாகிய முதல் வாரத்திலேயே உலகளவில் சுமார் 70 கோடி ரூபாய் வரை வசூல் செய்து திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இந்த அளவிற்கு சாதனை படைத்து வரும் உப்பெனா படத்தினை ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும்,அதிலும் தமிழில் ரீமேக்காகும் உப்பெனா படத்தில் தளபதி விஜய்யின் மகனான சஞ்சய் ஹீரோவாக அறிமுகமாக உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து சஞ்சய் தரப்பிலிருந்து கூறியுள்ளதாவது, சஞ்சய் இயக்குனர் ஆவதற்கான படிப்பையே படித்தார் என்றும் , எனவே அவர் ஹீரோவாக அறிமுகமாவதற்கான வாய்ப்புகள் குறைவு என்றும் கூறப்பட்டுள்ளது.மேலும் இது தொடர்பான எந்தவொரு பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…