மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது.
அமீரகத்தில் முதலீட்டாளர்கள், திறனாளர்கள், மருத்துவர்கள், நிபுணத்துவம் பெற்றவர்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோருக்கு கோல்டன் விசா என்ற 10 ஆண்டுகளுக்கான விசா வழங்கப்பட்டு வருகிறது. இதில் அவ்வப்போது விளையாட்டு வீரர்கள் மற்றும் திரைபிரபலங்கள் போன்றோருக்கும் கோல்டன் விசா வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக பாலிவுட் திரைப்பட நடிகர்களான ஷாரூக்கான் மற்றும் சஞ்சய் தத் ஆகிய இந்திய பிரபலங்கள் இந்த கோல்டன் விசாவை பெற்றுள்ளனர்.
அந்த வகையில், மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லால் மற்றும் புகழ்பெற்ற மலையாள நடிகர் மம்முட்டி ஆகியோருக்கு ஐக்கிய அரபு அமீரக அரசு கோல்டன் விசாவை வழங்கியுள்ளது. மலையாள திரையுலகை பொறுத்தவரையில், நடிகர் மோகன்லால் மம்முட்டி ஆகியோருக்கு தான் முதன் முறையாக ஐக்கிய அரபு அமீரகம் சார்பில் கோல்டன் விசா வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை புலம்பெயர் தொழிலதிபரான லூலூ குரூப் சேர்மன் எம்.ஏ.யூசப் அலி செய்துள்ளார்.
இதனையடுத்து இந்த கோல்டன் விசாவை, அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத் துறை தலைவர் முகமது அலி அல் ஷோறாப் அல் ஹம்மாதி-யிடம் இருந்து நடிகர் மோகன்லால் மட்டும் மற்றும் மம்முட்டி ஆகியோர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
இதுகுறித்து நடிகர் மோகன்லால் கூறுகையில், இதற்காக முழு முயற்சி எடுத்த யூசப் அலிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். கேரளாவில் நிறைய மாற்றங்களை ஏற்படுத்தி இருக்கிறார். அதனுடன் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
மேலும் நடிகர் மம்முட்டி கூறுகையில், ஐக்கிய அரபு அமீரகம் அரசு வழங்கிய கோல்டன் விசாவை சந்தோசமாக பெற்றுக்கொண்டோம். இது கேரள மக்கள் எங்களுக்கு அளித்த மிகப் பெரிய பரிசாக கருதுகிறோம். நீங்கள் இல்லாமல் இருந்திருந்தால், எங்களால் இதை அடைந்திருக்க முடியாது. இதை எங்களுக்கு வழங்கிய ஐக்கிய அரபு அமீரக அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரில் புதிய வீரர்களை இணைக்க பிசிசிஐ அனுமதி வழங்கியுள்ளது. ஐபிஎல் தொடர் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டதால்…
டெல்லி : மத்தியப் பிரதேச அமைச்சர் குன்வர் விஜய் ஷாவின் சகோதரி கர்னல் சோபியா குரேஷிக்கு எதிராக பயங்கரவாதிகளின் கருத்தை…
சென்னை : வக்ஃப் மசோதா வழக்கில் நீதிமன்றத்தின் இடைக்கால நடவடிக்கையில் தவெக முக்கிய பங்காற்றியது என்றும், சிறுபான்மையினர் உரிமைகளை காக்கும்…
ஒடிசா : இந்தியாவின் டிரோன் எதிர்ப்பு ராக்கெட் ''பார்கவஸ்த்ரா'' ஒடிசாவின் கோபால்பூரில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது. குறைந்த செலவில் SDAL நிறுவனம்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி…