கட்டுப்படுத்த முடியாத கண்ணீர் – சூரரைப் போற்று பாடலை புகழ்ந்த அமிதாப் பச்சன்.!

Published by
பால முருகன்

சூரரைப்போற்று பாடலுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் புகழாரம் தெரிவித்துள்ளார்.

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சூரரைப்போற்று . இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றிருந்த “கையிலே ஆகாசம்” ரசிகர்களை கவர்ந்து பலரது ரிங்க் டோனாக மாறியது என்றே கூறலாம். இந்த பாடலை ஜிவி பிரகாஷின் மனைவி சைந்தவி பாடியிருந்தார்.

மென்மையான இசையுடன் அழகான குரலில் வெளியான இந்த பாடலுக்கு பல தரப்பிலிருந்து பாராட்டுக்கள் வந்தது. இந்நிலையில், இந்த பாடலை பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் கேட்டுவிட்டு புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் ” சில தருணங்கள், சில தருணங்கள், நாம் நினைத்ததை விட அதிகமான உணர்வைக் கொடுக்கும் தருணங்கள் உள்ளன. நேற்றிரவு அப்படி ஒரு தருணம் எனக்கு அமைந்தது. அந்த உணர்ச்சி எவ்வளவு மிகுதியாக இருந்ததென்றால் என்னால் என் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. சூர்யா நடித்திருக்கும் படத்திலிருந்து ஒரு தமிழ்ப் பாடல். நமது மனதை உருக்கிவிடும். அதை நீங்கள் இந்தக் காணொலியில் பார்க்கலாம். ஆனால் நேற்று வேறொரு சூழலில் இதைப் பார்த்தேன். இன்னும் யதார்த்தமான ஒரு சூழலில்.

ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உணர்வு பந்தத்தை இது தாங்கியிருக்கிறது. இதுதான் அந்தக் காணொலி என சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்ற “கையிலே ஆகாசம்” பாடலை பதிவிட்டு “இந்தப் பாடல் மிக அழகாக, ஆழமாக, மென்மையாக, மனதைத் தொடுகிறது. இதைப் பற்றிக் குறிப்பிடும்போதே உணர்ச்சிகளைக் கிளறுகிறது. நான் இப்போது விடைபெறுகிறேன். ஏனென்றால் இன்னும் எழுத வேண்டும் என்று நினைத்தால் அது இன்னும் கண்ணீரை வரவழைக்கிறது. கண்ணீரைப் பகிர்ந்து கொள்வதும் ஒன்றாக இருக்கும் ஒரு உணர்வைத் தரும். புன்னகையும்தான். உங்கள் வாழ்வில் அதிக புன்னகையும், குறைவான கண்ணீரும் இருக்கட்டும்” என புகழ்ந்துள்ளார். இதற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

அப்போ கேப்டனா இருந்தேன் ஆனா இப்போ? மௌனம் கலைத்த ரோஹித் சர்மா!

மும்பை : ஐபிஎல் போட்டிகளில் அதிக கோப்பைகளை வென்ற அணிகள் என்றால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை அணிகளை சொல்லலாம். இதில்…

1 hour ago

‘பாவம், கொல்லாதீங்க.. 2 மடங்கு பணம் தாரேன் விட்டுடுங்க’.! ஆனந்த் அம்பானியின் அந்த மனசு..!

குஜராத் : தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி தனது 30வது பிறந்தாளையொட்டி ஜாம் நகரிலிருந்து 140…

1 hour ago

கச்சத்தீவு விவகாரம்: “10 வருசமா என்ன செஞ்சீங்க?” எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி.!

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கச்சத்தீவை திரும்பப் பெற ஒன்றிய அரசை வலியுறுத்தி தனித்…

2 hours ago

வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் தாக்கல்! எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு!

டெல்லி : இன்று ஏப்ரல் 2, 2025, மற்றும் நாளை (ஏப்ரல் 3, 2025) மக்களவையில் வக்பு வாரிய திருத்த சட்ட…

2 hours ago

கச்சத்தீவை மத்திய அரசு மீட்கக் கோரிய தீர்மானத்திற்கு பாஜக ஆதரவு.!

சென்னை : மூன்று நாட்கள் இடைவெளிக்குப் பிறகு, நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை தொடர்பான பட்ஜெட்…

2 hours ago

‘திமுக கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம்’ ஆ.ராசாவின் பேச்சுக்கு சேகர்பாபு பதில்.!

சென்னை : நீலகிரி மாவட்டம் உதகையில் திமுக மாணவர் அணி செயலாளர்கள் மற்றும் துணைச் செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் தனியார்…

3 hours ago