காசாவில் உள்ள ஹமாஸ் படையினர் மற்றும் இஸ்ரேல் படையினருக்கு இடையேயான மோதல் மிக பயங்கரமாக வெடித்து வரும் நிலையில் இந்த விவகாரத்தில் ஐநா தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தியுள்ளது.
கடந்த ஒரு வார காலமாகவே பாலஸ்தீனத்தில் ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவத்தினர்களுக்கு இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஏழு நாட்களாக நடைபெறக்கூடிய இந்த மோதலில் நூற்றுக்கணக்கான ஹமாஸ் போராளிகள் உயிரிழந்த நிலையில், இஸ்ரேலிலும் பலர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதும் அதற்கு பதிலாக ஹமாஸ் போராளிகள் வான் வழித் தாக்குதல் நடத்துவதும் என தொடர்ந்து மோதல் நடந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை ஹமாஸ் போராளிகளுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே நடைபெற்ற இந்த மோதலில் பல பெண்கள், குழந்தைகள் உட்பட 150க்கும் மேற்பட்ட ஹமாஸ் போராளிகள் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படையினர் இடையேயான மோதலை விரைவாக முடிவுக்கு கொண்டுவர ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் தலையிட வேண்டும் என சீனா வலியுறுத்தி உள்ளது. மேலும் சர்வதேச நீதிக்கு எதிரான பக்கத்தில் அமெரிக்கா நிற்பதால், இந்த விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இதுவரை நடவடிக்கை எடுக்காமல் உள்ளது என பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகமது குரோஷி அவர்களும் கூறியதாக சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த விவகாரத்தில் இரு தரப்புக்கும் சீன ஆதரவு அளிப்பதாகவும், ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதை உறுதிப்படுத்த வேண்டுமெனவும் சீனா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் இன்னும் ஒரு வருடத்தில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. அதற்குள் தமிழ்நாட்டின் அடுத்த முதலமைச்சர் யாராக இருப்பார்கள்…
அகமதாபாத் : குஜராத் டைட்டன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் 2022-ல் தொடங்கப்பட்ட உடன் குஜராத் அணிக்கு கேப்டனாக…
சேலம் : நேற்று தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இன்னும் ஓராண்டுகள் உள்ள நிலையில் தற்போதே தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு…
சென்னை : நேற்று மியான்மர், தாய்லாந்து, பாங்காங்கில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல்வேறு கட்டடங்கள் இடிந்து விழுந்து பாதிப்புள்ளாகியுள்ளன. இதில் மியான்மர்…
சென்னை : நேற்று ஐபிஎல் 2025 போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ராயல் சேலஞ்சர்ஸ்…