சமூக ஆர்வலர் ஸ்டான் சுவாமி மறைவுக்கு ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் இரங்கல்.
திருச்சியை சேர்ந்த சமூக ஆர்வலரான ஸ்டான் சுவாமி (84), எல்கர் பரிஷத் வழக்கில், கடந்த 2020-ஆம் ஆண்டு மும்பை தலோஜா சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவருக்கு ஜாமின் தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்த நிலையில், இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.
பழங்குடியினரின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த ஸ்டான் சுவாமிக்கு உரிய மருத்துவ சிகிச்சை வழங்க வேண்டும் என்று தேசிய மனித உரிமை ஆணையம் சமீபத்தில் உத்தரவிட்ட நிலையில், இவருக்கு மும்பையிலுள்ள ஹோலி ஃபேமிலி என்ற மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல் நிலை தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், அவர் காலமானார். இவரது மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி உட்பட பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், பழங்குடியின போராளி ஸ்டான் சுவாமி மறைவுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையம் இரங்கல் தெரிவித்துள்ளது. நீண்ட கால விசாரணைக் காவலில் அடைக்கப்பட்ட ஸ்டான் சுவாமி மறைவு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
மேலும், உரிய சட்ட அடிப்படை இன்றி சிறையில் உள்ள கைதிகளை அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 பேரை விடுவிக்க இந்திய அரசிடம் ஐ.நா தொடர்ந்து வலியுறுத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…
பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…
டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…
சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…
சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…
சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…