ஐ.நாவின் ஈரான் மீதான 15 ஆண்டு கால ஆயுதத் தடையானது நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
அணு ஆயுதங்கள் தயாரிப்பு மற்றும் தீவிரவாதத்தை ஊக்குவிப்பு என சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈரான் ஈடுபட்டதாக அந்நாட்டின் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தது உத்தரவிட்டது.
ஐ.நாவின் இந்த தடையால் கடும் நெருக்கடிக்கு தள்ளபட்ட ஈரான், அணுசக்தியை ஆக்கப்பூர்வமாகவே பயன்படுத்துவோம் என்ற உத்தரவாதத்தினை கொடுத்தது. இதனால் அவ்வற்றின் மீதான் பொருளாதாரத் தடையை மட்டும் ஐநா விலக்கியது.
ஆனால் ஈரான் மீது போடப்பட்ட ஆயுதத் தடை உத்தரவு அக்., 18ந்தேதி 2020 வரை தொடரும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா அறிவித்தது.அந்த தடையானது 15 ஆண்டு கழித்து நேற்றுடன் முடிவடைந்தது.
இந்நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உடனான உறவில் இருந்து வெளியேறிய அமெரிக்கா மீண்டும் ஈரான் மீதான பொருளாதார தடையை காலவரையின்றி நீட்டிக்க வேண்டும் என்று ஐநா.வை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது.
ஆனால் வல்லரசுவின் வலியுறுத்தல்களும் மேற்கொண்ட பல முயற்சிகளும் தோல்வி அடையவே ஈரான் மீது விதிக்கப்பட்ட ஐநாவின் தடைகள் அனைத்தும் நேற்றுடன் முடிவிற்கு வந்தது.
மேலும் ஈரான் மீது ஏதேனும் புதிய தடை நீட்டிப்பு பற்றிய எந்த அறிவிப்பையும் ஐநா இதுவரை அறிவிக்கவும் இல்லை அது குறித்து வாய்திறக்கவும் இல்லை.ஈரான் மீதான தடை முடிவால் அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளதாக ஐ.நா வட்டாடத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
பஞ்சாப் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றால் ஒவ்வொரு அணியில் இருக்கும் இளமையான வீரர்கள் தங்களுடைய திறமையை வெளிக்காட்டி பலருடைய…
பஞ்சாப் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சண்டிகரில் உள்ள மகாராஜா…
சென்னை : காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப. சிதம்பரம், இன்று குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி வருகிறது.…
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …