சரணடைய மறுத்து உயிரை விட்ட உக்ரைன் வீரர்கள்..!

Published by
murugan

சரணடைய மறுத்த 13 உக்ரைன் வீரர்களை ரஷ்ய இராணுவம் கொன்றது.

ரஷ்யாவிற்கும்- உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வரும் நிலையில், 13 உக்ரைன் வீரர்களை ரஷ்ய இராணுவம் கொன்றது. பாம்பு தீவில் 13 உக்ரைன் வீரர்களை ரஷ்ய போர்க்கப்பலில் இருந்த வீரர்கள் கொன்றது. உக்ரைன் வீரர்கள் வைத்து இருந்த ஆயுதங்களைக் கீழே வைக்கச் சொன்னபோது, ​​அவர்கள் கீழே போட மறுத்துவிட்டனர். ரஷ்ய வீரர்களிடம் சரணடைவதற்கு பதிலாக உயிரை விட முடிவு செய்தனர்.

இதனால், ரஷ்ய இராணுவம் அவர்களை சுட்டு கொலை செய்தது. இறப்பதற்கு  முன், உக்ரைன் வீரர்கள் ரஷ்ய போர்க்கப்பலில் உள்ள வீரர்களை பார்த்து “Fuck you”என்று கூறினார்கள். இந்த சம்பவத்தின் ஆடியோ கிளிப் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இதில், கருங்கடலில் உள்ள பாம்பு தீவை பாதுகாக்கும் உக்ரைன் ராணுவ வீரர்களுக்கு ரஷ்ய ராணுவ வீரர்கள் எச்சரிக்கை விடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் கேட்கிறது. ஆயுதங்களைக் கீழே போட மறுத்த பிறகு தாக்கப்பட்டனர்.

 நேற்று நடைபெற்ற போரின் முதல் நாளில் 137 உக்ரைன் பொதுமக்கள் மற்றும் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உக்ரைனுக்குள் நுழைந்த ரஷ்ய ராணுவம் மெதுவாக உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி நகர்ந்தது. உக்ரைன் உள்துறை அமைச்சர் அன்டன் ஜெராஷ்செங்கோ கூறுகையில், கியேவில் இன்று காலை முதல் மொத்தம் 6 குண்டுவெடிப்புகள் வீசினர்.

‘பேச்சுவார்த்தைக்கு தயார்’ – ரஷ்யாவை பேச்சுவார்த்தைக்கு அழைத்த உக்ரைன்..!

இந்த குண்டு கப்பல் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் வீசப்பட்டதாக கூறினார்.  மேலும், இந்த போரில் ரஷ்ய விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாகவும், 800 ரஷ்ய வீரர்களை கொன்றுள்ளதாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.

ரஷ்யா மீது அமெரிக்கா தடைகளை விதிப்பு: 

உக்ரைனுக்கு எதிரான போரை ரஷ்ய அதிபர் தேர்ந்தெடுத்ததாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதார தடைகளை அறிவித்தார். ஆனால் ரஷ்யப் படைகளுக்கு எதிராகப் போரை நடத்த அமெரிக்கப் படைகளை உக்ரைனுக்கு அனுப்ப மறுத்தார். ரஷ்யாவுக்கு எதிராக உலகமே ஒன்றுபட்டுள்ளது  என்றும் அமெரிக்கா மீது ரஷ்யா தாக்குதல் நடத்தினால், அதற்கு பதிலடி கொடுக்க அமெரிக்கா தயாராக உள்ளது என்று பிடன் கூறினார்.

 

Published by
murugan

Recent Posts

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

“கைது செய்யப்பட்டவருக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை.” – தவெக மறுப்பு.!

கரூர் : குளித்தலை பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வரும் சங்கீதா என்பவர் சில நாட்களுக்கு…

7 mins ago

ஜில் ஜில்..கூல் கூல்! அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக,…

12 mins ago

தீவிரமடையும் பருவமழை.. அதிகாரிகளுக்கு அதிரடி ஆர்டர் போட்ட துணை முதல்வர்.!

சென்னை : தமிழ்நாட்டில் வருகிற 15-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.…

17 mins ago

மக்களே! தமிழகத்தில் (07-10-2024) திங்கள்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர்…

39 mins ago

WWT20 : முதல் போட்டியே படுதோல்வி! இந்திய மகளிர் அணி அரை இறுதிக்கு தகுதி பெறுமா?

துபாய் : ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் நேற்று இந்திய மகளிர் அணி,…

56 mins ago

” சிறுநீரகக் கல்லை கரைக்கும் சிறுகண்பீளை செடி” ஆச்சரியமூட்டும் மருத்துவ குணங்கள்.!

சென்னை-சிறுகண்பீளை செடியின் பயன்கள் மற்றும் குணமாகும் நோய்களைப் பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம். சிறுகண்பீளை  ;…

1 hour ago