உக்ரைன் – ரஷ்யா 2ம் நாள் போர் – நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவிப்பு!

Published by
பாலா கலியமூர்த்தி

உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது போர் தொடுக்க நேற்று அதிகாலை ரஷ்ய அதிபர் புதின் உத்தரவு பிறப்பித்ததை தொடர்ந்து, பலமணிநேரமாக வான்வெளி தாக்குதல் நடத்தி வந்த ரஷ்யா, நேரடியாக ராணுவ படைகள் மூலம் தாக்குதலை மேற்கொண்டது. உக்ரைன் மீது இடைவிடாது தாக்குதல் நடத்தி வருவதால் உயிர் பிழைப்பதற்காக உக்ரைன் மக்கள் அங்குமிங்கும் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது. லுஹான்ஸ்க்கில் 2 நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்ய ஆதரவு உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் அறிவித்திருந்தது.

பாதுகாப்பை கருத்தில் கொண்டு உக்ரைன் ராணுவ தளங்கள், விமான தலங்களை மட்டுமே தாக்கி வருவதாக ரஷ்யா அதிபர் தெரிவித்தார். அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடை விதிக்கப்படும் என அறிவித்தனர். உக்ரனைக்கு நேட்டோ கூட்டமைப்பில் உள்ள நாடுகள் ஆயுதங்கள் வழங்கி ஆதரவு கரம் நீட்டி வருகின்றனர். ரஷ்யாவுக்கு சீனா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு அளித்துள்ளது.

ரஷ்யாவின் தாக்குதலை ஐநா சபை கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஆனால் உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி தொடர்ந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. பெலாரஸில் முகாமிட்டிருந்த ரஷ்யப்படைகள் தரை மார்க்கமாக உக்ரைனுக்குள் நுழைந்து தலைநகர் கீவ் சென்றடைந்தனர். இந்த தாக்குதலில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

செர்னோவில் உள்ள அணு உலையையும் ரஷ்யா ராணுவ படையினர் கைப்பற்றின. இந்த சூழலில், உக்ரைன் மீது இன்று இரண்டாம் நாள் தாக்குதலை ரஷ்யா தொடங்கியுள்ளது. தலைநகர் கீவில் இடைவிடாது ஏவுகணை தாக்குதல்கள் நடப்பதாக உக்ரைன் அரசு ஆலோசகர் தகவல் கூறியுள்ளார். பாலிஸ்டிக் ஏவுகணைகள் மூலம் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதாகவும், ரஷ்யாவின் போர் விமானத்தை உக்ரைன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

உலக நாடுகளின் பொருளாதாரம் தடை உள்ளிட்ட பல்வேறு எதிர்ப்புகளையும் மீறி உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து படையெடுத்து வருகிறது. இது தாக்குதல் தொடர்ந்து நடைபெறுமாயின் அடுத்த ஓரிரு நாட்களில் உக்ரைன் முழுவதையும் ரஷ்ய ராணுவம் கைப்பற்றி விடு என கூறப்படுகிறது. போர் தொடர்வதால், பீதியில் உறைந்துள்ள மக்கள் மெட்ரோ ரயில்நிலையங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.

ரஷ்யாவுக்கு எதிரான போரில் நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உருக்கமாக தெரிவித்துள்ளார். எதிர்பார்த்த நேட்டோ அமைப்பும், ராணுவ படைகளை அனுப்புவதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை என பொதுச்செயலாளர் தெரிவித்திருந்தார். இதனிடையே, உக்ரைன் மீது அரசு நடத்தும் போரை நிறுத்தக்கோரி ரஷ்யாவில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை காவல்துறை கைது செய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் மக்களுக்காக சுற்றி இருக்கும் நாடுகளின் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உக்ரைன் மீதான ரஷ்ய படைகளின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்து லூதுவேனியா மக்கள் போராட்டம் நடத்தி ஆதரவை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதி உதவி அளிக்க தயார் என உலக வங்கி அறிவித்துள்ளது. நெருக்கடியாக நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவுடன் இருப்போம் என உலக வங்கி குழுவின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து தினந்தோறும் படுகொலைகள்…அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…

8 hours ago

மங்களகரமா பாட்டுல ஆரம்பிக்கிறோம்! வாடிவாசல் படத்தின் தரமான அப்டேட்!

சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…

8 hours ago

சுனிதா வில்லியம்ஸுக்கு பாரத ரத்னா கொடுங்க! முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள்!

மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…

10 hours ago

பஞ்சாப் ரொம்ப உக்கிரமா இருப்போம்! எதிரணிக்கு எச்சரிக்கை விட்ட பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்!

பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…

11 hours ago

இந்த வருஷம் ஒன்னில்ல.., மொத்தம் 13.! களைகட்டும் ஐபிஎல் திருவிழா!

டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…

11 hours ago

வானதி சீனிவாசன் கேட்ட கேள்வி…அண்ணாமலையை சீண்டி பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில் பாலாஜி..!

சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…

11 hours ago