உக்ரைன்-ரஷ்யா இன்று முக்கிய பேச்சுவார்த்தை – முடிவுக்கு வருகிறதா போர்?..!

Published by
Edison

உக்ரைன் ரஷ்யா இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.இந்த பேச்சுவார்த்தை மூலம் தற்போது முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியிலும் எழுந்துள்ளது.

நேட்டோ நாடுகள் அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து,ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டதை தொடர்ந்து கடந்த பிப்.24 ஆம் தேதி முதல் உக்ரைன் மீது ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகிறது.குறிப்பாக, குடியிருப்பு மற்றும் பொதுமக்கள் மீதும் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்துகிறது.இதனால்,உக்ரைன் குழந்தைகள் பெரியவர்கள் என பலரும் உயிரிழந்துள்ளனர்.எனினும்,தங்கள் நாட்டை காக்க உக்ரைன் ராணுவத்தினரும் உரிய பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்த சூழலில் உயிரைக் காப்பற்றிக் கொள்ள உக்ரைன் மக்கள் மற்றும் அங்கு பயிலும் இந்திய மாணவர்கள் உட்பட பிற நாட்டு மாணவர்களும் சுரங்க அறைகளில் தங்கியுள்ளனர்.எனினும்,உக்ரைன் மக்களில் பெரும்பாலானோர் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர். அதே சமயம்,அங்குள்ள இந்தியர்களை விமானம் மூலம் மத்திய அரசு மீட்டு வருகிறது.

இந்நிலையில்,உக்ரைன் -ரஷ்யா இன்று முக்கிய பேச்சுவார்த்தை நடத்தவுள்ளது.முன்னதாக அண்டை நாடான பெலாரஸ்-இல் சில நிபந்தனைகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா விடுத்த அழைப்பை முதலில் நிராகரித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி,தற்போது அதை ஏற்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும்,இந்த பேச்சுவார்த்தைக்கு முன்நிபந்தனைகள் எதுவும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.இந்த நிலையில்,உக்ரைன் ரஷ்யா இடையே இன்று பெலாரஸ்-இல் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.இதற்கான ஏற்பாடுகளை தற்போது பெலாரஸ் அரசு மேற்கொண்டுள்ளது.

உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள உக்ரைன் -ரஷ்யா இடையேயான போர் இந்த பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பு உலக நாடுகள் மத்தியிலும் எழுந்துள்ளது.

 

Recent Posts

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

4 mins ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

9 mins ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 mins ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

42 mins ago

கவியூர் பொன்னம்மா மறைவு: மலையாள திரையுலகம் கண்ணீர் மல்க அஞ்சலி.!

கேரளா: மலையாள சினிமாவில் பல முன்னணி நடிகர்களுக்கு அம்மாவாக நடித்து மலையாள சினிமாவின் அம்மாவாகவே அறியப்பட்ட கவியூர் பொன்னம்மா (79)…

55 mins ago

மணிமேகலை vs பிரியங்கா : “தப்பா பேசுறவங்கள செருப்பால அடிக்கணும்”…வெங்கடேஷ் பட் ஆதங்கம்!

சென்னை : ஒரு குடும்பத்தில் இருவருக்குச் சண்டை வருவதுபோல, விஜய் தொலைக்காட்சியில் மணிமேகலை மற்றும் பிரியங்கா இருவருக்கும் இடையே ஆங்கரிங்…

1 hour ago