கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர பிரிட்டன் பிரதமர், 3 அடுக்கு எச்சரிக்கை முறையை இங்கிலாந்து முழுவதும் அமல்படுத்தியுள்ளார்.
உலகளவில் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. பொதுமக்கள் முதல் அதிபர் வரை யாரென பாராமல் கொரோனா பரவும் நிலையில், அதனை கட்டுக்குள் கொண்டுவர உலக நாடுகள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்தவகையில், பிரிட்டனில் கொரோனா பரவல் தற்பொழுது அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 13,000 பேருக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏற்கனவே அங்கு கொரோனா பரவலின் இரண்டாம் அலை தவிர்க்கமுடியாதது என கடந்த சில தினங்களுக்கு முன்பு அந்நாட்டு பிரதமர் கூறினார்.
3 அடுக்கு எச்சரிக்கை முறை:
இந்தநிலையில், கொரோனா பரவலை தடுக்க, நடுத்தரம் (medium), உயர் (high) மற்றும் மிக உயர்ந்த (very high) என 3 அடுக்கு எச்சரிக்கை முறையை பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், இங்கிலாந்து முழுவதும் அமல்படுத்தியுள்ளார். இந்த விதிகள், நோய்த்தொற்று விகிதங்களுக்கு ஏற்ப தீர்மானிக்கப்படுகின்றதாக தெரிவித்தார்.
Medium:
நடுத்தர நிலை (medium), இதில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள பகுதிகளாகும். இந்த எச்சரிக்கை முறையில் 10 மருத்துவ குழுக்கள் தாயாராக உள்ளதாகவும், இந்த நடுத்தர கட்டுப்பாட்டில் பெரும்பாலான பகுதிகள் அடங்கும் என பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
High:
உயர் நிலை (high), இந்த நிலை, தற்போது இங்கிலாந்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாட்டுக்கும். இதில் 144 தடை உத்தரவு போல தெருவில் மக்கள் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மக்களை தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க உதவுகிறது.
Very High:
மிக உயர்ந்த நிலை (Very High) என்பது, நோய் தொற்று அதிகளவில் இருக்கும் பகுதிகளாகும். இந்த பகுதிகளில் தேசிய சுகாதார சேவை (NHS) எல்லா இடங்களிலும் இருப்பார்கள். பார்கள், பப்கள் போன்ற இடங்கள் மூடப்பட்டிருக்கும்.
ஒரு வீட்டில் வசிப்பவர், மற்ற வீடுகளுடன் பழகுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியூர்களுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், சில்லறை கடைகள் மற்றும் கல்வி தொடர்பான இடங்கள் செயல்பட அனுமதி விதிக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் அஜித் குமார் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீசர் பிப்ரவரி 28, 2025 அன்று வெளியாகும்…
சென்னை : முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை தனது முகநூல் பக்கத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்கிற முறையில், 2026-ஆம் ஆண்டு…
டெல்லி : இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 1984 ஆம் ஆண்டு, அக்டோபர் 31 அன்று தனது சீக்கிய…
ராவல்பிண்டி : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபியின் 7-வது போட்டி இன்று ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவிருந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா…
துபாய் : கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணியும், இந்திய கிரிக்கெட் அணியும் மோதியது.…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நாளை காலை…