சீனாவை தொடர்ந்து, இந்த வைரஸ் பல நாடுகளில் மிக தீவிரமாக பரவி வருகிறது. இதனை தடுப்பதற்கு அணைத்து நாடுகளும் மிக தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி கொல்கத்தா நகரில் உள்ள பொலியகாட்டா ஐ.டி. ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பால், 2 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டார்கள்.
இந்த குழந்தைகளில், ஒன்று 9 மாத பெண் குழந்தை, இன்னொன்று 6 வயது பெண் குழந்தை. இருவரும் சகோதரிகள் தான். இந்த 2 பேருக்கும் கொரோனா தொற்று இருந்த நிலையில், அவர்களின் தாயும் உடன் இருந்தார். ஆனால் அவருக்கு வைரஸ் தொற்று இல்லை. இருந்தாலும் குழந்தைகளுக்காக அவரும் தனி வார்டில் இருந்தார்.
குழந்தைகளை பொறுத்தவரையில், அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக தான் காணப்படும். எனவே, இந்த குழந்தைகளை மருத்துவர்கள் மிகவும் தீவிரமாக சிகிச்சை அளித்து வந்துள்ளனர். இதனையடுத்து, கடந்த 8 நாட்களில் அவர்கள் பூரணமாகக் குணம் அடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை நடத்திய மருத்துவ சோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, 2 குழந்தைகளையும் வீட்டுக்கு எடுத்துச் செல்ல டாக்டர்கள் அனுமதித்துள்ளனர். இந்த இரு குழந்தைகள் ,கொரோனா தொற்றில் இருந்து தப்பிய இளம் நோயாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…
செங்கல்பட்டு : மாவட்டம் திருவிடந்தை இடத்தில நேற்று பாமக சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு பிரமாண்டமாக…
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…