அமெரிக்காவில் நடுவானில் மோதி கொண்ட இரண்டு விமானங்கள்.
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தின், சால்டோட்னா விமான நிலையம் அருகே , இரண்டு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒருவர் மாத்திரம் உயிருக்கு போராடிய நிலையில், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மற்ற அனைவருமே சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். ஒரு விமானத்தில் மாநில பிரதிநிதி கேரி நாப் தனியாக இருந்துள்ளார். இவர், குடியரசுக் கட்சிக்காரராகவும், மாநில மன்றத்தின் இரு கட்சி பெரும்பான்மையின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இந்த விபத்தில் கேரி நாப்பும் உயிரிழந்துள்ளார்.
மாநில பிரதிநிதி கேரி நாப் உட்பட, பைலட் கிரிகோரி பெல்(67), வழிகாட்டி டேவிட் ரோஜர்ஸ்(40), காலேப் ஹல்சி (26), ஹீதர் ஹல்சி (25), மேக்கே ஹல்சி (24), மற்றும் கிர்ஸ்டின் ரைட் (23) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
கேரி நாப் அவர்களின் மரணத்திற்கு பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்ற நிலையில், மற்ற 6 பேரின் குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும், இந்த சம்பவம் குறித்து, FAA மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரித்து வருகின்றன.
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு நடத்தும் பள்ளிகளிலும், தேசிய கல்வி கொள்கையை பின்பற்றும் தனியார் பள்ளிகளும்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு முக்கிய 9 அறிவிப்புகளை அறிவித்தார்.…
டெல்லி : கடந்த வாரம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காவல்துறை மானியம் தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது அரசு…
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் மாதத்திலிருந்து கடும் வெப்பம் கொளுத்தி வருகிறது. இந்த வேளையில், சில இடங்களில்…
திருவனந்தபுரம் : கேரள மாநில முதல்வர் அலுவலகம் உள்ளிட்ட அரசு அலுவலகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து வளாகங்களிலும் சோதனை நடத்த…